மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகமான, திருச்சி என்.ஐ.டி.,யில் (NIT) காவிரி நதிப் படுகைக்கான நிலை மதிப்பீடு மற்றும் மேலாண்மைத் திட்டத்திற்கான மையத்தில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.05.2025
Junior Research Fellow (JRF)
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி: B. E./B. Tech. in Civil Engineering and M. E./M. Tech. or Equivalent in Water Resources Engineering/ Hydraulic Engineering / Hydroinformatics/ Agriculture Engineering/ Remote Sensing/ Geoinformatics பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: முதல் இரண்டு வருடங்களுக்கு ரூ. 37,000 + 16% HRA
மூன்றாம் வருடம் ரூ. 42,000 + 16% HRA
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.nitt.edu/home/other/jobs/CIV_cCauvery_JRF_2025.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Dr. Nisha Radhakrishnan, Associate Professor, Department of Civil Engineering, National Institute of Technology, Tiruchirappalli – 620 015
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.05.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.