/tamil-ie/media/media_files/uploads/2023/06/teacher.jpeg)
பள்ளி ஆசிரியர் (பிரதிநிதித்துவ படம்)
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களுக்கான பட்டியலை மத்திய கல்வித் துறை அமைச்சகம் வெளியிட்டது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் செப்டம்பர் 5-ம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் நாடு முழுவதும் உள்ள சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அன்றைய தினம் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 50 ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மதுரை மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியை எஸ்.எஸ்.மாலதி ஆகியோருக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 5-ம் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்குவார். ஒவ்வொரு விருதாளருக்கும் நற்சான்றிதழ், ரூ.50,000 ரொக்கப் பணம், வெள்ளி பதக்கம் ஆகியவை வழங்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.