அறிவுப் புரட்சி: இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் 13 ஆண்டுகளில் 80.9% ஆக உயர்வு

இந்தியா கல்வியில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. எனினும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வாழ்க்கையிலும் கல்வி ஒரு அத்தியாவசிய அங்கமாக மாறும்போதுதான் உண்மையான வளர்ச்சி சாத்தியமாகும்.

இந்தியா கல்வியில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. எனினும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வாழ்க்கையிலும் கல்வி ஒரு அத்தியாவசிய அங்கமாக மாறும்போதுதான் உண்மையான வளர்ச்சி சாத்தியமாகும்.

author-image
WebDesk
New Update
literacy in India

Union Education Minister Dharmendra Pradhan

டெல்லி: இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் கடந்த 2011 ஆம் ஆண்டில் 74% ஆக இருந்தது, தற்போது 2023-24 ஆம் ஆண்டில் 80.9% ஆக உயர்ந்துள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி. இருப்பினும், ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையிலும் கல்வி என்பது ஒரு நிஜமான யதார்த்தமாக மாறும்போதே உண்மையான முன்னேற்றம் ஏற்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Advertisment

சர்வதேச எழுத்தறிவு தினமான திங்கட்கிழமை அன்று, காணொளி வாயிலாக உரையாற்றிய அவர், "கல்வி என்பது வெறும் வாசிப்பு மற்றும் எழுதுவது மட்டுமல்ல. அது ஒருவரின் கண்ணியம், அதிகாரம் மற்றும் தன்னம்பிக்கைக்கான வழி," என்று அழுத்தமாக கூறினார்.

மத்திய அரசின் (ULLAS) புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ்,, 3 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் 42 லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். இது ஒரு பெரிய கல்விப் புரட்சிக்கு வழிவகுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், கிட்டத்தட்ட 1.83 கோடி மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவை மதிப்பீடு செய்து, அதில் 90% பேர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், இந்த திட்டம் தற்போது 26 இந்திய மொழிகளில் கற்றல் பொருட்களை வழங்குவதன் மூலம், கல்வியை உண்மையிலேயே உள்ளடக்கியதாக மாற்றியுள்ளது.

இமாச்சலப் பிரதேசம், திரிபுரா, மிசோரம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் முழுமையான எழுத்தறிவை எட்டியுள்ளன. ஜூன் 24, 2024 அன்று, லடாக் யூனியன் பிரதேசம் முழுமையாக எழுத்தறிவு பெற்ற முதல் யூனியன் பிரதேசம் என அறிவிக்கப்பட்டது. இந்த அபாரமான சாதனைகள், அரசு, சமூகம் மற்றும் தன்னார்வலர்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என பிரதான் பாராட்டினார்.

Advertisment
Advertisements

இந்த ஆண்டின் கொண்டாட்டத்தின் கருப்பொருள் "டிஜிட்டல் யுகத்தில் கல்வியை மேம்படுத்துதல்" என்பதாகும். இது நாடு முழுவதும் வாசிப்பு, எழுதுதல், எண்ணியல் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் திறன்களை வளர்ப்பதில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வகிக்கும் முக்கியப் பங்கை எடுத்துக்காட்டுகிறது.

இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி!

மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி பேசுகையில், "இந்தியாவில் கல்வியின் கருத்துரு டிஜிட்டல் கல்வியையும் உள்ளடக்கி விரிவடைந்துள்ளது," என்றார். மேலும், "உலகத்திற்கே, குறிப்பாக உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகளுக்கு, கல்வி மற்றும் மேம்பாட்டிற்கான வலுவான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் இந்தியா ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. பத்து ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் மூலம் ஐம்பது ஆண்டுகள் எடுத்திருக்கக்கூடிய சாதனைகளை நாம் சாதித்திருக்கிறோம்," என்று பெருமையுடன் கூறினார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும். 

India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: