ஆளுநர் மாளிகையில் சிண்டிகேட் கூட்டம்: ஆளுநருக்கு கேள்வி எழுப்பிய அமைச்சர் பொன்முடி

தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையிலும் அரசியல் செய்ய ஆளுநர் நினைப்பதாகவும், பல்கலைக் கழகங்களில் தனது ஆதிக்கத்தை செலுத்த முயற்சி செய்து வருவதாகவும் அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையிலும் அரசியல் செய்ய ஆளுநர் நினைப்பதாகவும், பல்கலைக் கழகங்களில் தனது ஆதிக்கத்தை செலுத்த முயற்சி செய்து வருவதாகவும் அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டினார்.

author-image
WebDesk
New Update
ponmudi

சென்னை ஆளுநர் மாளிகையில், அனைத்து பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள், செனட் மற்றும் சிண்டிகேட்களில் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டவர்கள் உடன் ஆர்.என்.ரவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

Advertisment

அதன்பின்னர், ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “பல்கலைக்கழகங்களில் வெளிப்படைத்தன்மையுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டிய சிண்டிகேட் மற்றும் செனட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில்தான் நடைபெறுகின்றன.

துறையின் முதன்மைச் செயலாளர் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் இந்தக் கூட்டங்களில் பங்கேற்காமல், தலைமைச் செயலகத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக இருக்கின்றன. நேர்மையான முறையில் இந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

Advertisment
Advertisements

மேலும், பல பல்கலைக்கழகங்களில் பதிவாளர் பணியிடங்களும், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களும் காலியாக இருக்கின்றன. இந்தப் பதவிகள் அனைத்தும் கூடுதல் பொறுப்பு என்ற பெயரில் பல ஆண்டுகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிண்டிகேட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடத்த ஆளுநருக்கு என்ன தகுதியுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளர்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையிலும் அரசியல் செய்ய ஆளுநர் நினைப்பதாகவும், பல்கலைக் கழகங்களில் தனது ஆதிக்கத்தை செலுத்த முயற்சி செய்து வருவதாகவும் அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “நாகை மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை எப்படி ஏற்க முடியும். பல்கலைக்கழகங்களின் சிண்டிகேட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடப்பதாக குற்றம் சாட்டும் ஆளுநர், மீன்வளப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவை ஆளுநர் மாளிகையில் நடத்தலாமா? அதே சிண்டிகேட் கூட்டத்தை ராஜ்பவனில் ஏன் அவர் நடத்தினார்? சிண்டிகேட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடைபெறுவதாக கூறுவதற்கு ஆளுநருக்கு என்ன தகுதியுள்ளது?” என கேள்வி எழுப்பினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: