யு.பி.எஸ்.சி தேர்வு; தாமதமாக வந்தவர்கள் தேர்வு எழுத முடியாததால் ஏமாற்றம்

கோவையில் யு.பி.எஸ்.சி தேர்வு; தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு; தேர்வு எழுத முடியாததால் தேர்வர்கள் ஏமாற்றம்

கோவையில் யு.பி.எஸ்.சி தேர்வு; தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு; தேர்வு எழுத முடியாததால் தேர்வர்கள் ஏமாற்றம்

author-image
WebDesk
New Update
upsc exam kovai

கோவையில் நான்கு மையங்களில் யு.பி.எஸ்.சி தேர்வு நடைபெறும் நிலையில் தாமதமாக வந்த தேர்வுகள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படாததால் திரும்பிச் சென்றனர்.

Advertisment

இன்று (செப்டம்பர் 14) மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) ஒருங்கிணைந்த இராணுவ தேர்வுகள் (2) நடைபெறுகிறது. இந்தத் தேர்வை எழுத கோவையில் 1535 பேர் தேர்வு விண்ணப்பித்துள்ளனர்.

இந்தத் தேர்வு கோவையில் நான்கு தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. கோவையில் அவிநாசிலிங்கம் கல்லூரி உள்ளே இரண்டு மையங்கள், ஆர்.எஸ் புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும் பி.எஸ்.சி (PSG) கல்லூரி ஆகிய நான்கு தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெறுகிறது.

Advertisment
Advertisements

இந்தத் தேர்வுக்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பாளர் அலுவலர்களும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இரண்டு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு எழுத வரும் தேர்வர்கள் செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்களை எடுத்து வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதால் தேர்வு எழுத வரும் அனைத்து தேர்வர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தேர்வுக்கு காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி காலை 8:30 மணிக்கு வாயிற்கதவு பூட்டப்பட்டது. அதனையடுத்து தாமதமாக வந்த தேர்வர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் பல தேர்வர்கள் தேர்வெழுதாமல் திரும்பி சென்றனர்.

பி.ரஹ்மான், கோவை

Upsc kovai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: