Advertisment

விழுப்புரத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாம்; இளைஞர்கள் பலர் பங்கேற்பு

தமிழக அரசின் தனியார் துறை வேலை வாய்ப்பு; இளைஞர்கள் பங்கேற்க விழுப்புரம் ஆட்சியர் அழைப்பு விடுத்திருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnpsc notification, tnpsc annual planner

தமிழக அரசின் தனியார் துறை வேலை வாய்ப்பு; இளைஞர்கள் பங்கேற்க விழுப்புரம் ஆட்சியர் அழைப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டலம் மற்றும் உறுப்பு சமுதாயக் கல்லூரியுடன் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டிவனத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிப்ரவரி 13 -ந் தேதி நடைபெற உள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டலம் மற்றும் உறுப்பு சமுதாயக் கல்லூரியுடன் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டிவனம் தாலுகா பேரணி கிராமத்தில் உள்ள தூய இருதய கலை அறிவியல் கல்லூரியில் நாளை (பிப்ரவரி 13) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.

இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

முகாமில் 8, 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்துவிதமான கல்வித் தகுதி உடையவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. முகாம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (04146-226417), 9499055906 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலைதேடும் இளைஞர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் இம்முகாமைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்." இவ்வாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வேலை வாய்ப்பு முகமில் இளைஞர்கள் பலரும் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment