/tamil-ie/media/media_files/uploads/2023/06/NEET-UG-2023-3.jpg)
நீட் தேர்வு
அனைத்து எம்.பி.பி.எஸ் (MBBS) இடங்களும் கவுன்சிலிங்கின் போது நிரப்பப்படுவதால், ஆண்டுக்கு இரண்டு முறை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) நடத்துவது சாத்தியமில்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் (NMC) சமீபத்தில் கூறியது.
ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வை நடத்தக் கோரி அகில இந்திய மாணவர் சங்கம் எழுதிய கடிதத்துக்கு தேசிய மருத்துவ ஆணையம் இவ்வாறு பதிலளித்தது.
இதையும் படியுங்கள்: NEET UG 2023: தமிழ்நாடு எம்.பி.பி.எஸ் கவுன்சிலிங்; விண்ணப்பிக்க ஜூலை 10 கடைசி தேதி
மேலும், தேர்வை நடத்துவதற்கு அதிக அளவு பணம் மற்றும் பிற ஆதாரங்கள் தேவைப்படும் என்றும், அதை இரண்டு முறை நடத்துவது அரசாங்க கருவூலத்தில் தேவையற்ற சுமையை ஏற்படுத்தும், என்றும் தேசிய மருத்துவ ஆணையம் கூறியது.
இதற்கிடையில், தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் பட்டதாரி மருத்துவக் கல்வி விதிமுறைகள் 2023 இன் கீழ் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை வாபஸ் பெற்றது. மேலும், திறன் அடிப்படையிலான மருத்துவக் கல்விப் பாடத்திட்ட விதிமுறைகள் 2023, புதிய மருத்துவக் கல்லூரியை நிறுவுவதற்கான குறைந்தபட்ச தரநிலைத் தேவைகள்/ MBBS பாடநெறி விதிமுறைகள் 2023 இல் இடங்கள் அதிகரிப்பு மற்றும் மருத்துவக் கல்வி விதிமுறைகளின் தரங்களைப் பராமரித்தல் ஆகியவற்றுக்கான புதிய வழிகாட்டுதல்கள் குறித்து NMC பங்குதாரர்களிடமிருந்து கருத்துகளை அழைத்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.