ஃபார்முலா மட்டும் எழுதினால் பகுதி மதிப்பெண் கிடைக்குமா? சி.பி.எஸ்.இ விளக்கம்

சி.பி.எஸ்.இ பொதுவாக ஒவ்வொரு ஸ்டெப்க்கும் மதிப்பெண் வழங்கும் முறையை பின்பற்றுகிறது; ஆனால் சூத்திரங்களை மட்டும் எழுதினால் மதிப்பெண் கிடைக்குமா? தேர்வு கட்டுப்பாட்டாளர் விளக்கம்

author-image
WebDesk
New Update
cbse exam

சி.பி.எஸ்.இ (CBSE) போர்டு தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், தேர்வு நுட்பங்கள், மதிப்பெண் முறைகள் மற்றும் பல்வேறு வகையான கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கான சிறந்த அணுகுமுறை பற்றிய கேள்விகள் மாணவர்களுக்குள் அடிக்கடி எழுகின்றன. இந்தக் கவலைகளைத் தீர்க்க, சி.பி.எஸ்.இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் விரிவான வழிகாட்டுதலை வழங்குகிறார்:

Advertisment

இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்

மொழிப் பாடங்களில் 10 மதிப்பெண் வினாக்களுக்கான வார்த்தை வரம்பு என்ன? வார்த்தை வரம்பை மீறினால் மதிப்பெண்கள் கழிக்கப்படுமா?

பொதுவாக, கேள்வியில் வார்த்தை வரம்பு குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், உங்கள் குறிப்பிட்ட பாடத்திட்டம் அல்லது தேர்வு வழிகாட்டுதல்களைச் சரிபார்ப்பது நல்லது. வரம்பை மீறியதற்காக மதிப்பெண்கள் குறைக்கப்படாவிட்டாலும், கூடுதல் மதிப்பெண்களும் வழங்கப்படாது. எனவே, அதிகம் எழுதுவதால் எந்தப் பயனும் இல்லை. உங்கள் பதிலை எழுதும் முன், மதிப்பெண்களை மனதில் வைத்து கவனமாக சிந்தியுங்கள். வார்த்தை வரம்பை மீறுவது பின்வரும் குறைபாடுகளைக் கொண்டிருக்கலாம்:

Advertisment
Advertisements

- இது உங்களை முக்கிய பாயிண்ட்களிலிருந்து விலகிச் செல்ல வழிவகுக்கும் அல்லது தேவையற்ற விவரங்களைச் சேர்க்கச் செய்யும்.

- அதிகப்படியான உள்ளடக்கத்தை எழுதுவதற்கு அதிக நேரம் ஆகலாம், இது மீதமுள்ள கேள்விகளில் உங்கள் செயல்திறனைப் பாதிக்கலாம்.

பரிந்துரைக்கப்பட்ட வார்த்தை வரம்பை கடைப்பிடித்து, உங்கள் பதில் தெளிவாகவும் துல்லியமாகவும் இருப்பதை உறுதிசெய்வது நல்லது.

ஆசிரியர்களை மேற்கோள் காட்டாமல் மேற்கோள்களை எழுதுவது இந்தி அல்லது ஆங்கில கட்டுரை கேள்விகளில் மதிப்பெண்களை பாதிக்குமா?

சி.பி.எஸ்.இ வாரிய கேள்விகள் குறிப்பிட்ட பதில்கள் தேவைப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பதிலளிக்கும் முன் ஒவ்வொரு கேள்விக்கும் என்ன தேவை என்பதை கவனமாகப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் பதிலுக்கு மேற்கோள் பொருத்தமானதாக நீங்கள் கருதினால், அதைச் சேர்க்கலாம். பதில்களில் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை நன்கு புரிந்துகொள்ள, நீங்கள் மாதிரி வினாத்தாள்களைப் பார்க்கவும் மற்றும் மதிப்பெண் திட்டங்களைப் படிக்கவும். மேற்கோள்களை எப்போது, எப்படிப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வகையான கேள்விகளுக்கான தேவைகளைப் புரிந்துகொள்ள இந்த இரண்டு ஆவணங்களும் உங்களுக்கு உதவும்.

கட்டுரை வடிவிலான கேள்விகளுக்கு, நான் சரியான மேற்கோள்களைப் பயன்படுத்த வேண்டுமா அல்லது எனது சொந்த வார்த்தைகளில் பதில்களை எழுத வேண்டுமா? எந்த அணுகுமுறை அதிக மதிப்பெண்களைப் பெறுகிறது?

கட்டுரை அடிப்படையிலான கேள்விகளில், உங்கள் சொந்த வார்த்தைகளில் பதில்களை மாற்றுவது அல்லது மறுவடிவமைப்பது நல்லது. ஏன் என்பது இங்கே:

புரிதலைக் காட்டுகிறது:

உங்கள் சொந்த வார்த்தைகளில் எழுதுவது உள்ளடக்கத்தின் உண்மையான புரிதலை நிரூபிக்கிறது. நீங்கள் உரையை விவரிக்கவும் விளக்கவும் முடியும் என்பதை இது நிரூபிக்கிறது.

தெளிவு மற்றும் சுருக்கம்:

பதில்களை மாற்றுவது பெரும்பாலும் அதிக கவனம் செலுத்தும் பதில்களுக்கு வழிவகுக்கிறது. இது தேவையற்ற நீண்ட பதில்களைத் தவிர்க்க உதவுகிறது மற்றும் உங்கள் பாயிண்ட்களை மிகவும் பயனுள்ளதாக்குகிறது.

- மீண்டும் மீண்டும் செய்வதைத் தவிர்க்கவும்: நேரடியாக நகலெடுப்பது தேவையற்ற உள்ளடக்கத்திற்கு வழிவகுக்கும் மற்றும் நீண்ட மேற்கோள்களில் பொருத்தமற்ற தகவல்கள் இருக்கலாம்

- சிறந்த மதிப்பெண்: துல்லியம் மற்றும் வெளிப்பாடு ஆகிய இரண்டிற்கும் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. உங்கள் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவது மொழி புலமை மற்றும் எழுதும் திறனைக் காட்டுகிறது.

இரண்டு முறைகளையும் இணைப்பதே சிறந்த அணுகுமுறை - உங்கள் பாயிண்ட்களை ஆதரிக்க தேவையான போது பத்தியில் இருந்து முக்கிய சொற்றொடர்களை உள்ளடக்கும் போது, விளக்கங்களுக்கு உங்கள் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தவும்.

ஒரு மாணவருக்கு பதில் தெரியாவிட்டால், சூத்திரங்களுக்கு (ஃபார்முலா) சி.பி.எஸ்.இ பகுதி மதிப்பெண்களை வழங்குமா?

சி.பி.எஸ்.இ பொதுவாக ஒவ்வொரு ஸ்டெப்க்கும் மதிப்பெண் வழங்கும் முறையை பின்பற்றுகிறது - கணிதக் கேள்விக்கான இறுதிப் பதிலைப் பெறவில்லை என்றால், சூத்திரங்களின் சரியான பயன்பாடு, சரியான முறை அல்லது தேவையான ஸ்டெப்களைக் குறிப்பிட்டு, அவை தெளிவாக அமைக்கப்பட்டிருந்தால், பகுதி மதிப்பெண்களைப் பெறலாம். படிகளை தெளிவாகக் காண்பிப்பது முக்கியம். நீங்கள் சூத்திரத்தை எழுதி, அடுத்தடுத்த படிகளை முயற்சித்தால் (கணக்கீட்டில் நீங்கள் தவறு செய்தாலும் கூட), முயற்சிக்கு ஓரளவு மதிப்பெண் பெறலாம். மதிப்பெண்கள் பெற வெறும் சூத்திரம் மட்டும் போதாது.

Cbse Exams

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: