Advertisment

மே 5-ல் நடந்த நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்; உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்

வினாத்தாள் கசிவு விவகாரம்; மே 5-ல் நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; மறுதேர்வு நடத்த உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்

author-image
WebDesk
New Update
neet reg

மே 5-ல் நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; மறுதேர்வு நடத்த உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மே 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் தேர்வை நடத்துமாறு உச்சநீதிமன்றத்தில் சில மாணவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இந்தியாவில் மருத்துவப் படிப்புகளின் சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர முடியும். நீட் தேர்வில் தகுதி பெறுவதன் மூலம் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், ஆயுஷ் படிப்புகள் உள்ளிட்ட படிப்புகளில் சேரலாம்.

இந்த ஆண்டுக்கான நீட் நுழைவு தேர்வு மே 5 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. தேர்வு முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேர்வு முடிந்த ஓரிரு நாட்களிலேயே நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக இணையதளத்தில் தகவல்கள் வெளியாகின.

இந்த தகவல்களை மறுத்த தேசிய தேர்வு முகமை எந்த ஒரு வினாத்தாள் கசிவு குறித்து வெளிவரும் சமூக ஊடக பதிவுகள் எல்லாமே அடிப்படை ஆதாரமற்றவை என தெரிவித்திருந்தது. ஆனால் பீகார், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்து முறைகேடு நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த முறைகேடு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். 

இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சில மாணவர்கள் தரப்பில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மே 17ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதேநேரம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட எந்த ஒரு தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கு கோடைக்கால விடுமுறைக்கு பிறகு ஜூலை மாதம் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்த நிலையில் நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு விவகாரத்தால் மே 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வை நடத்த மாணவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

NEET Exam Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment