பாஜக.வின் 5 வேட்பாளர்கள் விவரம் தெரிய வந்தது. தூத்துக்குடியில் தமிழிசை செளந்தரராஜன், சிவகங்கையில் ஹெச்.ராஜா, ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன் போட்டியிட இருக்கிறார்கள்.
மக்களவைத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இன்று மாலை வரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் அதிமுக அணியில் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகளின் வேட்பாளர்கள் விவரம் தெரிய வந்திருக்கிறது. அதன்படி தூத்துக்குடியில் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன், கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், சிவகங்கையில் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, கோவையில் முன்னாள் மத்திய அமைச்சர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிட இருக்கிறார்கள்.
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று மாலையில் காரைக்குடியில் அளித்த பேட்டியில் இதை தெரிவித்தார். தேசியத் தலைமை அதிகாரபூர்வ அறிவித்திருப்பதாகவும் ஹெச்.ராஜா கூறினார்.