தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் இடைத் தேர்தல் நிறுத்தப்பட்டிருப்பதில் உள்நோக்கம் உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில், "திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதிகள் விவரம் இன்று அல்லது நாளை இரவுக்குள் முழுவதும் வெளியிடப்படும். காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் தவிர, மற்ற அனைத்துக் கூட்டணி கட்சிகளுக்குமான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன.
மேலும் படிக்க - Election 2019 Live Updates
தமிழகத்தில் தற்போது 21 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், 18 தொகுதிகளுக்கே தேர்தல் அறிவித்துள்ளார்கள். ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் அறிவிக்க வேண்டும். வழக்கு நிலுவையில் உள்ளது என்பதற்காக, தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. நீதிமன்றம், அங்கு தேர்தல் நடத்த தடைவிதிக்கவில்லை.
மூன்று தொகுதிகளிலும் தேர்தல் நிறுத்தப்பட்டிருப்பதில் உள்நோக்கம் உள்ளது" என்றார்.
மேலும் படிக்க - மக்களவைத் தேர்தல் 2019: தமிழக தேர்தல் அட்டவணை முழு விவரம்!