Tamil Nadu 4 assembly constituency bypolls 2019 : அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளின் இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய ஏப்ரல் 29ம் தேதி இறுதி நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே மாதம் 2ம் தேதி வாபஸ் பெற இறுதி நாளாகும். வேட்புமனுக்கள் சரிபார்க்கும் பணி ஏப்ரல் 30ம் தேதி நடைபெறும்.
மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தமிழகம் மட்டுமல்லாமல், கர்நாடகா மற்றும் கோவாவில் காலியாக இருக்கும் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் தேதிகளை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
தமிழகத்தில் அதிமுகவில் இருந்து அமமுகவிற்கு சென்ற 18 எம்.எல்.ஏக்கள் செல்ல, அவர்களின் பதவி பறிக்கப்பட்டது. அந்த 18 தொகுதிகள் உட்பட 22 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று பலத்தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்ட நிலையில், 18 சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தலை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் நடத்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக பெரும்பான்மை பெரும் எனில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Get all the Latest Tamil News and Election 2021 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook
Web Title:Tamil nadu 4 assembly constituency bypolls 20 will happen on may
முதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்
புலி எப்போதும் இப்படி கோபத்தை கட்டுப்படுத்தாது: எச்சரிக்கை வீடியோ
காயமடைந்தாலும் விளையாட தயாராக இருந்தேன் : மனம் திறந்த ஆல்ரவுண்டர் ஜடேஜா
பிப்.18 முதல் ஆன்லைன் வகுப்பு? தெளிவு படுத்துமா அண்ணா பல்கலைக்கழகம்?
ஆள் துணையுடன் சசிகலா எழுந்து நடக்கிறார்: லேட்டஸ்ட் மெடிக்கல் ரிப்போர்ட்