ஓட்டு போடாதவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் - வாக்காளர்களை அச்சுறுத்தும் திமுக வேட்பாளர்

சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்கவில்லை என்றால் உடல்நிலை சரியில்லாமல் போகும் என்று கடலூர் திமுக வேட்பாளர் மக்களை அச்சுறுத்தியுள்ளார்.

சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்கவில்லை என்றால் உடல்நிலை சரியில்லாமல் போகும் என்று கடலூர் திமுக வேட்பாளர் மக்களை அச்சுறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
ஓட்டு போடாதவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் - வாக்காளர்களை அச்சுறுத்தும் திமுக வேட்பாளர்

Tamilnadu Assembly ELection 2021 : கடலூர் தொகுதி மக்களுக்கு கேரள மந்திரவாதிகள் மூலமாக சூனியம் வைத்துள்ளோம். திமுகவுக்கு ஓட்டுபோடாதவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும்" என்று கடலூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐயப்பன் வாக்காளர்களை அச்சுறுத்தி வருகிறார்.

Advertisment

தமிழக அரசியல் களம் சட்டசபை தேர்தலுக்கு தீவிரமாக  தயாராகி வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா. இதில் வேட்பாளர்கள் மக்களை கவரும் வகையில் பலவகையான புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒரு சிலர் ஹோட்டலில் தோசை சுடுவது, மக்களுக்கு துணி துவைத்து கொடுப்பது, மக்களுடன் சேர்ந்து நடனமாடுவது என பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

ஆனால் இந்த முயற்சிகளை எல்லாம் பின்னுக்கு தள்ளும் வகையில் கடலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன், அந்த தொகுதியில் மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பிரச்சாரத்தில் பேசிய அவர், தேர்தலுக்கு முன்பாக யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால் அந்த பணத்தை ஏப்ரல் 6-ந் தேதி வரை செலவு செய்ய வேண்டாம்.

கேரளாவில் இருந்து மந்திரவாதிகளை வரவழைத்து அவர்கள் சூனியம் வைத்துள்ளேன். இதில் யாரேனும் எதிர் தரப்பில் பணம் வாங்கிக்கொண்டு திமுகவுக்கு ஓட்டு போடாமல் இருந்தால், அவர்களுக்கு வயிற்றுவலி மற்றும் உடல்நிலை சரியில்லாமல் போகும் என்றும், அவ்வாறு வலி வந்து நீங்கள் துன்பப்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்று கூறி மக்களை அச்சுறுத்தி வருகிறார். வாக்கு சேகரிக்க பலரும் பல வழிகளில் முயன்று வரும் நிலையில், கடலூர் வேட்பாளரின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

ஆனால் திமுக வேட்பாளர் ஐயப்பனின் இந்த அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நாம் தமிழகர் கட்சியின் பிரமுகர் மாரிச்செல்வம், திமுக வுக்கு ஓட்டுப்போடரதே சொந்த செலவுல சூனியம் வச்சிக்குற மாதிரி தான் என்று தனது ட்விட்டர் பதிவில் அறிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Election 2021

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: