/tamil-ie/media/media_files/uploads/2021/03/vijayakanth-1.jpg)
Tamilnadu Assembly Election DMDK Vijayakanth Campaign : தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இந்த தேர்தலில், கூட்டணியில் இருந்து விலகி டிடிவி தினகரனின் அமமுக கூட்டணியில் இணைந்தது. இந்த கூட்டணியில், தேமுதிகவுக்கு 60 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வருகிறது.
இந்த முறை உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடாத நிலையில், அவர் முதன் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விருத்தாச்சலம் தொகுதியில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். தொடர்ந்து 60 தொகுதிகளிலும் தேமுதிக வேட்பாளர்ளை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், எல்.கே. சுதீஷ் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.
இதில் கடந்த வாரம் தேமுதிக துணைப்பொதுச்செயலாளர் எல.கே.சுதீஷூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில், இன்று முதல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதில் இன்று கும்மிடிபூண்டி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டில்லியை ஆதரித்து பஜார் சாலையில், விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்த வேனில் வந்த அவர், வாக்காளர்களிடம் கைகூப்பியும் கையசைத்தும் வாக்குகள் சேகரித்தார்.
தொடர்ந்து திருத்தணி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். தொடர்ந்து 5 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள விஜயகாந்தின் பிரச்சாரம் குறித்து அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று தேமுதிக தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.