திருப்பரங்குன்றம் இடைதேர்தல் வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு!

உடனே தேர்தல் வழக்கில் தீர்ப்பு அளிக்க முடியாது

உடனே தேர்தல் வழக்கில் தீர்ப்பு அளிக்க முடியாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
News in tamil

News in tamil : உள்ளாட்சி தேர்தல் தேதி!

திருப்பரங்குன்றம் இடைதேர்தல் தொடர்பான தேர்தல் வழக்கில் வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வெளியாகும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisment

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ஏ.கே.போஸின் வெற்றியை செல்லாது என அறிவித்து, தன்னை சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி வேல்முருன் விசாரித்து வந்த நிலையில், அதிமுக பொது செயலாளராக இருந்து மறைந்த ஜெயலலிதா வின் கைரேகை தொடர்பாகவும் சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கைரேகை தொடர்பாக விசாரிக்க கூடாது என்றும், தேர்தல் வழக்கை மட்டும் நடத்த சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இதற்கிடையில், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ், கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதுகுறித்து நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டு, இறப்பு சான்றிதழை தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment
Advertisements

அதனை ஏற்ற நீதிபதி விசாரணையை முடித்து நவம்பர் இறுதிவாரம் தீர்ப்பை ஒத்திவைத்தார்.இந்நிலையில் வழக்கு நிலுவையில் இருப்பதால் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கவில்லை.

இதில் திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க உத்தரவிட கோரியும்,

திமுக சார்பில் டாக்டர் சரவணன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன் முறையீடு செய்யப்பட்டது. அவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால் அதை காரணம் காட்டி தேர்தலை நடத்தாமல் இருப்பது தவறு எனவே தேர்தல் வழக்கில் நாளையே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதனை கேட்ட நீதிபதி வேல்முருகன், வழக்கு நிலுவையில் இருப்பதால், தேர்தல் நடத்த கூடாது என இந்த வழக்கில் இதுவரை உத்தரவிடவில்லையே என தெரிவித்தார். உடனே தேர்தல் வழக்கில் தீர்ப்பு அளிக்க முடியாது என்றும் வழக்கில் வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்தார்.

Chennai High Court General Election

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: