/tamil-ie/media/media_files/uploads/2018/11/2.0-release-tomorrow-4.jpg)
2.0 release, 2.0 முதல் காட்சி
சங்கர் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படமான 2.0 நாளை ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. 2.0 முதல் காட்சி நாளை அதிகாலை தொடங்குகிறது.
ரஜினியின் 2.0 படம் நாளை வெளியாகும் சூழலில், சென்னையில் உள்ள திரையரங்குகளில் அதிகாலை காட்சிகள் திரையிடப்படுமா என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.
2.0 முதல் காட்சி :
இருப்பினும் ரஜினி படம் என்றாலே காலை முதல் ஷோ தான் பிரம்மாண்டம். இதுவரை வெளியான எல்லா ரஜினி படங்களையும் முதல் காட்சியிலேயே பார்க்க எல்லா ரசிகர்களும் போட்டுப் போட்டி டிக்கெட் வாங்க நிற்பார்கள். அந்த வகையில் நாளை வெளியாகும் 2.0-க்கும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
ஆனால் சமீபத்தில் சர்கார் திரைப்படம் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அதிகாலை காட்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால் 2.0 படத்துக்கு அதிகாலை காட்சிகள் கிடையாது என கூறப்பட்டு வந்தாலும், சென்னையில் உள்ள காசி, ரோகினி போன்ற புறநகர் தியேட்டர்களில் நாளை காலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் இந்த முதல் காட்சிக்கு ரூ.550 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் டிக்கெட் விலைப் பற்றி கவலை படாமல் எவ்வித யோசனையும் இல்லாமல் ரசிகர்கள் அனைத்து டிக்கெட்டுகளை வாங்கி தீத்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.