/tamil-ie/media/media_files/uploads/2023/07/marithu.jpg)
நடிகர் மாரிமுத்து மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகரை சேர்ந்த ஆறுமுகம் என்கிற சோதிடர் நடிகர் மாரிமுத்துவுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதில் உரிய விளக்கம் அளிக்காவிட்டால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திருச்செங்கோடு காவல்நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட சோதிடர்கள் நடிகர் மாரிமுத்து மீது புகார் அளித்துள்ளனர்.
இந்தத் சோதிடர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. முன்னதாக நிகழ்ச்சியொன்றில் நடிகர் மாரிமுத்து சோதிடர்களை லெப்ட் ரைட் வாங்கினார்.
மாரிமுத்துவின் கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியாமல் சோதிடர்கள் திணறினார்கள். அப்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் மாரிமுத்து மீது காவல் நிலையத்தில் சோதிடர்கள் தொடர் புகார்களை அளித்துவருகின்றனர். இந்தப் புகார்களின் அடிப்படையில் மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர் சீரியலில் நடிக்க முடியாமல் போகலாம்.
இதனால் நம்பர் 1 ட்ரெண்டில் உள்ள ஆதி குணசேகரன் என்ற மாரிமுத்துவுக்கு சிக்கல் வரலாம். எதிர் நீச்சல் சீரியலில் மாரிமுத்துவின் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.