3 வயதில் அறிமுகம், 17-ல் மரணம்; நடிகை மரண வழக்கில் சிக்கிய பாலு மகேந்திரா மீண்டது எப்படி?

இயக்குனர் பாலுமகேந்திராவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சோபாவுடனான அவரது உறவு பற்றி, அவரது உதவியாளர் ராஜராஜன் வாவ் தமிழா யூடியூப் சேனல் நடத்திய நேர்க்காணலில் பகிர்ந்து கொண்டார்.

இயக்குனர் பாலுமகேந்திராவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சோபாவுடனான அவரது உறவு பற்றி, அவரது உதவியாளர் ராஜராஜன் வாவ் தமிழா யூடியூப் சேனல் நடத்திய நேர்க்காணலில் பகிர்ந்து கொண்டார்.

author-image
WebDesk
New Update
balu magendra

புகைப்படம்: ட்விட்டர்

தமிழ் சினிமா வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் இயக்குனர் பாலுமகேந்திரா. தனது திரைப்படங்களில் உணர்வுபூர்வமான கதைகளையும், காட்சி அமைப்புகளையும் நேர்த்தியாகக் கையாண்டவர். அத்தகைய ஒரு கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த சில மர்மமான பக்கங்களை, அவரின் உதவியாளரும், கேமராமேனுமான ராஜராஜன், வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கான ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

Advertisment

ராஜராஜனின் கூற்றுப்படி, பாலுமகேந்திராவின் வாழ்க்கையில் சோபா ஒரு காதலியாக மட்டுமின்றி, ஒரு குருவைப் போல இருந்திருக்கிறார். அவர்களின் உறவு காதல் என்ற வட்டத்திற்குள் அடங்காத, ஆழமான, புரியாத ஒரு பந்தமாக இருந்திருக்கிறது. சோபாவின் இழப்பு பாலுமகேந்திராவின் வாழ்வில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது. சோபாவின் மரணத்தில் போலீஸ் விசாரணை தீவிரமடைந்தபோது, குற்றவாளி என பாலுமகேந்திராவை நிரூபிக்க காவல்துறை முயற்சித்தது. இந்த காலகட்டத்தில், பாலுமகேந்திராவின் மனைவி அகிலா மிகுந்த மனவேதனைக்கு உள்ளானதாக ராஜராஜன் குறிப்பிடுகிறார்.

சோபாவின் இறுதி சடங்கின்போது பாலுமகேந்திராவுடன் உடனிருந்த ராஜராஜன், சோபாவின் ஆன்மா தன்னை கடந்து சென்றதை உணர்ந்ததாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். சோபா, பாலுமகேந்திராவின் குடும்ப உறுப்பினர் போலவே பழகியதாகவும், ஒரு முறை தனக்கு பைக் ஒன்றை வாங்கிக் கொடுத்ததாகவும் ராஜராஜன் நினைவு கூர்ந்தார். இது சோபா மற்றவர்களின் மீதும் எவ்வளவு அன்பு கொண்டிருந்தார் என்பதை உணர்த்துகிறது.

actor shoba

Advertisment
Advertisements

பாலுமகேந்திராவிடம் உதவி கேமராமேனாகப் பணியாற்றிய ராஜராஜனுக்கு, அந்த காலகட்டம் ஒரு திரைப்படப் பள்ளியில் பயின்றது போல இருந்திருக்கிறது. பாலுமகேந்திராவின் வீட்டில் தங்கியிருந்து அவரது தனிப்பட்ட வேலைகளையும் கவனித்து, ஒரு பையனைப் போல அவருக்கு உதவியுள்ளார். டப்பிடிப்பின்போது பாலுமகேந்திராவின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்து, தினமும் குறிப்புகள் எடுத்துக்கொள்வது ராஜராஜனின் வழக்கமாக இருந்துள்ளது.

குறிப்பாக, பாலுமகேந்திரா இயற்கையான ஒளியில் படப்பிடிப்பதை மிகவும் விரும்புவார். அதற்காகவே அதிகாலையிலேயே படப்பிடிப்பை தொடங்கும் பழக்கம் அவருக்கு இருந்திருக்கிறது. இந்த நுட்பங்களை ராஜராஜன் தனது குருவிடமிருந்து உள்வாங்கி, தனது கலையை மேம்படுத்திக் கொண்டதாகப் பெருமையுடன் கூறுகிறார். ஒரு கலைஞனின் கலைப் பயணம் மட்டுமல்ல, அவனது தனிப்பட்ட வாழ்க்கையும், உறவுகளும் தான் அவனது படைப்புகளின் ஆழத்திற்கு காரணம் என்று ராஜராஜனின் இந்த நேர்காணல் நமக்கு உணர்த்துகிறது.

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: