தமிழ் மலையாளத்தில் நடிகர் மற்றும் இயக்குநரான பிரதாப் போத்தன் உடல்நலக்குறை காரணமாக நேற்று திடீரென மரணமடைந்த நிலையில், இறப்பதற்கு முன்பு அவர் பதிவிட்ட பேஸ்புக் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 1978-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாள ஆராவம் என்ற படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர் பிரதாப் போத்தன். தொடர்ந்து தகரா என்ற மலையாள படத்தில் நடித்த அவர், 1979-ம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள் என்ற படத்தின் மூலம் தமிழல் அறிமுகமானர்.
தொடர்ந்து,இளமை கோலம், மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் வெற்றி பெற்றாலும் திருமண வாழக்கையில் பிரதாப் போத்தன் தோல்வியையே சந்தித்துள்ளார். கடந்த 1985-ம் ஆண்டு அவர் இயக்கிய முதல் படமான மீண்டும் ஒரு காதல் கதை என்ற படத்தில் நாயகியாக நடித்த ராதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஒரு வருடத்தில் இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு 1990-ம் ஆண்டு அமலா என்பரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கேயா என்ற மகள் உள்ள நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு பிரதாப் அமலா ஜோடி பிரிந்தது. மனைவியை பிரிந்தாலும் மகளுடன் பிரதாப் பேசிக்கொண்டிருந்தார். மேலும் அவரது மகள் கேயா தனது அப்பா பிரதாப் போத்தனுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
இதனிடையே விவாகரத்துக்கு பின் தனிமையில் இருந்த பிரதாப் போத்தன் கடைசியாக தமிழில் விஜய் சேதுபதி நடித்த துக்ளக் தர்பார் என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகரான திகழ்ந்த பிரதாப் போத்தன் தமிழில் சில படங்களையும், மலையாளத்தில் 3 படங்களையும் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், தற்போது பிரதாப் போத்தன் மரணமடைந்துவிட்ட நிலையில், அவரை இறப்பதற்கு முன்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பல பதிவுகளை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கடைசியாக வெளியிட்ட பதிவில், நான் கலை பற்றி நினைக்கிறேன். ஆனால் திரைப்படங்களில் மக்களக் தங்களது இருப்பை உறுதி செய்ய முயற்சிக்கிறார்கள் என்று ஜிம் மாரிசன் வரிகளை பதிவிட்டுள்ளார். அதற்கு முன்பாக பெருக்கல் என்பது விளையாட்டின் பெயர்.ஒவ்வொரு தலைமுறையும் ஒரே மாதிரியாக விளையாடுகிறது என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் வாழ்கை என்பது பில்களை செலுத்துவது போன்றது என்றும், ஒரு பிரச்சனையின் அறிகுறிகளை அதன் மூல காரணத்தைக் கண்டறியாமல் சிகிச்சையளித்தால், நீங்கள் மருந்தகத்தைச் சார்ந்திருக்கத் தொடங்குவீர்கள் என்றும் பதிவிட்டுள்ளார். நீண்ட நேரம் சிறிய அளவு உமிழ்நீரை விழுங்குவதால் மரணம் ஏற்படுகிறது என்று ஜார்ஜ் கார்லின் வரிகளை பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து சிலர் அதிக அக்கறை காட்டுவார்கள் அதை காதல் என்று நினைக்கிறேன் என்று ஏ.ஏ.மில்னே வின்னி திபூஹ் வரிகளை பதிவிட்டுள்ளார். மேலும் மரணத்திற்கு முன்பாக மட்டுமல்லாமல், பொதுவாகவே பிரதாப் போத்தன் தனது பேஸ்புக் பக்கத்தில் வாழ்கை தொடர்பான கருத்துக்களையே பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.