Advertisment

உணர்வுகளோடு எதையுமே சாதிக்க வேண்டும்... உணர்ச்சி பொங்கிய விஜயகாந்த் : வைரல் வீடியோ

ஜெயலலிதா கருணாநிதி என இரண்டு அரசியல் ஆளுமைகள் இருந்த காலகட்டத்தில் தனியாக அரசியல் கட்சி தொடங்கி குறுகிய காலத்தில் எதிர்கட்சி தலைவராக உயர்ந்தவர் விஜயகாந்த்.

author-image
WebDesk
New Update
விஜயகாந்த் சரியாக இருந்தால் எனக்கு இவ்வளவு கஷ்டம் இல்லை : வில்லன் நடிகர் உருக்கம்

உடல்நலக்குறைவால் தற்போது அரசியலில் இருந்து விலகி ஓய்வில் இருந்தாலும் விஜயகாந்த் குறித்து நாள்தோறும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றனர். அந்த வகையில் காவிரி நதி நீருக்காக நடிகர் சங்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தபோது விஜயகாந்த பேசிய வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், அரசியலில் குறுகிய காலத்தில் முத்திரை பதித்தவர் என்று பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த். 1979-ம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விஜயகாந்த், சட்டம் ஒரு இருட்டறை, நீதி பிழைத்தது, ஈட்டி, நூறாவது நாள் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

தொடக்கத்தில் பல வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகரான உயர்ந் விஜயகாந்த் தயாரிப்பாளராகவும், விருதகிரி என்ற படத்தை இயக்கி ஒரு இயக்குனராகவும் முத்திரை பதித்தவர். மேலும் ஜெயலலிதா கருணாநிதி என இரண்டு அரசியல் ஆளுமைகள் இருந்த காலகட்டத்தில் தனியாக அரசியல் கட்சி தொடங்கி குறுகிய காலத்தில் எதிர்கட்சி தலைவராக உயர்ந்தவர் விஜயகாந்த்.

தான் நடிகராக இருந்த காலகட்டத்திலும், அரசியலில் இருந்து காலட்டத்திலும் ஏராளமாக உதவிகளை செய்துள்ள விஜய்காந்த், படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கு சமமான உணவு வழக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வந்தவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் மேலும் நண்பர்களுக்காக எதையும் செய்யக்கூடியவர், உதவி என்று யார் கேட்டாலும் அனைவருக்கு உதவுபவர் என்று அவருடன் இருந்த பலரும் கூறியுள்ளனர்.

தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அரசியலில் இருந்து விலகியுள்ள விஜயகாந்த் ஓய்வில் இருந்து வருகிறார். ஆனாலும் தினமும் அவர் பற்றிய தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.  இந்த வகையில் பூக்குரல் என்றும் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள விஜயகாந்த் குறித்த ஒரு வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.

கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி நடிகர் சங்கத்தினர் நடித்திய உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய விஜயகாந்த், இங்கு நாம் போராட்டம் நடத்துகிறோம் ஆனால் பிரச்சனையை தீர்க்க அங்கே யார் முயற்சி செய்வார்கள். இங்கே நாம் உண்ணாவிரதம் இருந்தால் அங்கே அவர்கள் உண்ணாவிரதம் இருப்பார்கள்.

இந்த போராட்டங்களை எடுத்து காட்ட இங்கேயும் டிவி இருக்கு அங்கேயும் டிவி இருக்கு ஆனால் தண்ணீர் கொடுக்க யார் இருக்கா? தண்ணீர் வாங்கி கொடுக்க வேண்டும் என்ற தைரியம் யாரிடம் இருக்கிறது. மத்திய அரசு உத்தரவிட்டால் தான் முடியும் இல்லை என்றால் நாம் இப்படியே மேடைபோட்டு பேசிக்கொண்டே இருக்க வேண்டிதான். உணர்வுகளோடு எதையுமே சாதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment