Advertisment

ஆர்யாவின் பரிதாப நிலை: ரோட்டில் படுத்து உறங்கினார் !

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆர்யாவின் பரிதாப நிலை:  ரோட்டில் படுத்து உறங்கினார் !

நடிகர் ஆர்யா  ரோட்டில் படுத்து உறங்குவது போல் வெளியான புகைபடத்தை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

Advertisment

தலைப்பு பார்த்து உள்ளே வந்த அனைவரும்  சற்று நிதானத்துடன் செய்தியை படிக்கவும்.  எங்க வீட்டு மாப்பிள்ளை  என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் நடிகர் ஆர்யா தற்போது அடிக்கடி பேசப்படும்  நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார்.   ரொம்பவே ஜாலியான    கேரக்டர் என்று ஆர்யாயை அவரது நண்பர்கள் அடிக்கடி புகழ்வார்.

கல்யாணம் செய்துக் கொள்ள இருப்பதாக ஊரையே கூடிவிட்டு, கடைசியில்  தனது படத்தில் வரும் கிளைமேக்ஸ் போல  அந்த நிகழ்ச்சியில் ஆர்யா கொடுத்த பதில் பலருக்கும்  எரிச்சலை அதிகப்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பெண்களின் நிலை என்னவென்று நமக்கு தெரியாது. ஆனால்., நிகழ்ச்சியின் ஹீரோ ஆர்யாவின் தற்போதைய நிலையை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

,

வேறென்ன.. சைக்கிளிங்கை பொழுதுப்போக்காக கொண்டிருக்கும் ஆர்யா  தனது நண்பர்களுடன் இரவு நேரத்தில் 200 கிமீ சைக்கிளிங் சென்றுள்ளார். அப்போது, ஓய்வு எடுப்பதற்காக சாலையின் ஓரத்தில் படுத்து உறங்கியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தான்  ஆர்யாவிற்கு ஏதோ ஆகிவிட்டது போல் நினைத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் உண்மையில் ரோட்டில் படுத்து உறங்கியதை  ஒரு சொர்க்கம் போல் நினைத்து ஆர்யா தனது நண்பர்களுக்கு இந்த ட்ரப்பை ஏற்பாடு செய்ததிற்காக நன்றி  கூறி வருகிறார். முதலில் நாங்களும் ஃபோட்டை கண்டு  உங்களை போல் ஷாக் தான் ஆனோம்.

 

 

Arya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment