Advertisment

ட்ரெண்ட் ஆகும் பாலாவின் சமீபத்திய உதவி; என்ன செய்தார் தெரியுமா?

சின்னத்திரை நடிகர் கே.பி.ஒய் பாலாவின் சமீபத்திய உதவி அனைவரின் பாராட்டையும் பெற்றுக் கொடுத்துள்ளது. பொதுவாக பாலா பல்வேறு உதவிகள் மூலம் அறியப்படுகிறார்.

author-image
WebDesk
New Update
Actor Bala Surprice

சின்னத்திரை நடிகர் பாலாவின் சமீபத்திய உதவி பலரையும் நெகிழச் செய்துள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சின்னத்திரையில் அறிமுகமாகி ஒரு சில சினிமாவில் நடித்துவருபவர் பாலா. இவரை கே.வி.ஒய் பாலா என்றும் அழைப்பார்கள். இவர் கொரோனா பெருந்தொற்று காலம் முதல் பல்வேறு உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்துவருகிறார்.

கடந்த ஆண்டு சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கிய போது பாதிக்கப்பட்ட ரூ.1000 வீதம் தன்னிடம் இருந்த ரூ.2 லட்சத்தை உதவியாக கொடுத்தார். மேலும், வாணியம்பாடியில் மாற்றுத்திறனாளி ஒருவர் முச்சக்கர சைக்கிள். பெட்ரோல் பங்க் தொழிலாளிக்கு இரு சக்கர வாகனம் என உதவிகளை தொடர்ந்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் அவரின் சமீபத்திய உதவி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது சலவைத் தொழிலாளி பெண்மணி ஒருவருக்கு சலவை இயந்திரம் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இந்த உதவியை பலரும் பாராட்டியுள்ளனர். மேலும் அவரின் உதவி சமூக வலைதளத்திலும் ட்ரெண்ட் ஆகிவருகிறது. இது குறித்து பேசிய பாலா, “எனக்கு யாரும் உதவி செய்யவில்லை. நான் என்னால் முடிந்ததை செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment