/tamil-ie/media/media_files/uploads/2022/07/Vidhya-no.1.jpeg)
வித்யா நம்பர் ஒன் சீரியலில் வித்யாவுக்கு என்னுடன் ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது என வில்லன் ரஞ்சித் வழக்கு தொடுக்க தற்போது புதிய பிரச்சனை உருவாகியுள்ளது.
முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல் ஒளிபரப்பி வரும் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வித்யா நம்பர் 1. வித்யாவை ஏற்றுக் கொள்ளாமல் இருந்த சஞ்சய் தற்போது அவளின் காதலை புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்ட நிலையில் வித்யாவை படிக்க வைத்து வருகிறார்.
ஏற்கனவே படிக்க சென்ற இடத்தில் வாத்தியார் வித்யாவிடம் தவறாக நடந்துகொண்டது பெரிய பிரச்சினையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறாள் வித்யா. வேதவல்லி ஊரில் இல்லாத போது இன்கம்டேக்ஸ் ரைடு வர சஞ்சய், வித்யா என இருவரும் ஒருவழியாக இந்த பிரச்சனையை சமாளித்தனர்.
இந்நிலையில் ஆரம்பத்தில் வித்யாவுக்கு ஒருவருடன் திருமணம் வரை சென்று அந்த கல்யாணம் நின்று போனது. இதில் வித்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட வில்லன் ரஞ்சித் எனக்கும் வித்யாவுக்கும் ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது, என்னை ஏமாற்றி விட்டு இன்னொரு திருமணம் செய்து கொண்டார் என போலி சான்றிதழ்களுடன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதால் வித்யாவுக்கு புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது.
வேதவல்லி இந்த பிரச்சனைக்கு நீயே தான் தீர்வு காண வேண்டும் என கை விரித்து விட வித்யா தனக்காக தானே வாதாட முடிவெடுக்கிறாள். இந்த வழக்கில் தனக்குத் தானே வாதாடி வித்யா எப்படி ஜெயிக்க போகிறாள் என்பது குறித்த காட்சிகள் வரும் எபிசோடுகளில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், இந்த கோர்ட் காட்சிகளில் நீதிபதியாக பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பாக்கியராஜ் அவர்கள் நடிக்க உள்ளார்.
திரைக்கதை நாயகனான இவர் வித்யா நம்பர் 1 சீரியல் கதை பிடித்துப்போன காரணத்தினால் இந்த சீரியலில் சிறப்பு வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.