தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும், வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும் என்பது போல, ஜீ தமிழ் சீரியல்களிலும் அதிரடியான மாற்றங்களுடன் அனைத்து தொடர்களும் புத்துயிர் பெற்றுள்ளன.
அந்த வகையில், வரும் ஜனவரி 22-ம் தேதி முதல் நினைத்தேன் வந்தாய் என்ற புதிய சீரியலும் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் சினிமாவில் அபியும் நானும் படத்தின் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயந்துள்ள நடிகர், கணேஷ் வெங்கட்ராம் ஏற்கனவே தாலாட்டு உள்ளிட்ட சில சீரியல்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள நிலையில், இந்த சீரயில் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
இந்த சீரியலில் கீர்த்தனா பொட்வால் கணேஷின் முதல் மனைவியாகவும் ஜாஸ்மின் நாயகியாகவும் நடிக்கிறார். மேலும் கணேஷ் வெங்கட்ராமின் குழந்தைகளாக கனிஷ்கா, கௌஷிக், யுக்தா, ஷாபா ஆகியோர் நடிக்க மேலும் பல நட்சத்திரங்கள் இந்த சீரியலில் இணைந்து நடிக்க உள்ளனர். மனைவியை இழந்த எழில் (கணேஷ் வெங்கட்ராம்) தனது 4 குழந்தைகளை வளர்க்க தடுமாறுகிறார்.
இந்த நிலையில் சுடர் (ஜாஸ்மின்) என்ற பெண் அவரது வாழ்க்கைக்குள் வர, அதன் பிறகு நடக்க போவது என்ன? சுடர் 4 பிள்ளைகளின் மனங்களை வென்று, அவர்களுக்கு தாயாக மாறுவாளா? இல்லையா? என்பது தான் இந்த சீரியலின் கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய சீரியலால் சில சீரியல்களின் ஒளிபரபப்பு நேரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
அதன்படி, தற்போது வரை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் சீரியல் வரும் திங்கள் முதல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. மேலும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம் சீரியல் இனி வாரத்தின் 7 நாட்களும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த மீனாட்சி பொண்ணுங்க சீரியல் இனி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாக இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.