தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமான நடிகர் கங்கா இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
1983-ம் ஆண்டு டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான 'உயிருள்ள வரை உஷா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகர் கங்கா அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது. இதைத் தொடர்ந்து கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களிடையே வரவேற்பை
பெற்றார்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர். மிகவும் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் கங்கா நடித்திருந்தார். கங்கா திருமணம் செய்து கொள்ளாமல், தன்னுடைய சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் கங்காவுக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 63. இவரின் மறைவுக்கு திரையுலக நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் . இறுதி சடங்குகள் கங்காவின் சொந்த ஊரான சிதம்பரத்தில் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“