நடிகர் ஜீவா அவரது நிறுவனத்தில் வேலை பார்த்தவரும், காமெடி நடிகருமான பாவா லட்சுமணனுக்கு மாதந்தோறும் கணிசமான தொகையை கொடுத்து உதவி வருகிறார். பாவா லட்சுமணனுக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையிலும், உடல் நலம் சரியில்லாத நிலையில் அவருக்கு ஜீவா உதவி செய்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருப்பவர் பாவா லட்சுமணன். இவர் பல்வேறு படங்களில்
காமெடி நடிகராக நடித்து பிரபலமடைந்தார். குறிப்பாக சரத்குமாரின் மாயி படத்தில் இடம்பெற்ற இவர் நடித்து பேசிய வாமா மின்னல் என்ற டயலாக் காமெடி பெரிய ஹிட் ஆனது. இதன் பிறகு சில படங்களில் நடித்தார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையிலும், உடல் நலம் சரியில்லாததாலும் அவர் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பாவா லட்சுமணன் தனக்கு நடிகர் ஜீவா மாதந்தோறும் ரூ.15,000 அனுப்பி உதவி செய்து வருவதாக கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், "நான் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது ஜீவா ஸ்கூல் படித்துக் கொண்டிருந்தார். சின்ன பையன் ஆக இருக்கும் போதே நான் அவரை பார்த்திருக்கிறேன். அப்ப இருந்து நான் அவர்களுடைய குடும்ப நிறுவனத்தில் வேலை பார்த்ததால் என் மீது அவருக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டு.
அதற்குப் பிறகு எனக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கிய போது ஜீவா எனக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் அனுப்ப தொடங்கினார் இப்ப வரைக்கும் அனுப்புகிறார்.
நான் கேட்டது கூட கிடையாது ஆனால் அவராகவே அனுப்பிவிடுவார். அதுபோல நான் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போது ஆர்.பி சவுத்ரி சார்தான் எனக்கு பெறும் தொகையை அனுப்பி வைத்து என்னுடைய மருத்துவ செலவுகளை கவனித்துக் கொண்டார்" என்று எமேஷனலாக கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“