Advertisment

குலு மணாலி நிலச்சரிவில் சிக்கிய நடிகர் கார்த்தி மற்றும் படக்குழு... பரபரப்பு தகவல்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actor karthi, நடிகர் கார்த்தி

actor karthi, நடிகர் கார்த்தி

ஹிமாச்சலில் பெய்து வரும் கனமழை காரணமாக, நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘தேவ்’ படத்தின் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஜோடி சேர்ந்து நடித்து வரும் ‘தேவ்’ திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் குலுமனாலியில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஹிமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ‘தேவ்’ படத்தின் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குலுமனாலி நிலச்சரிவில் சிக்கிய நடிகர் கார்த்தி :

இது குறித்து தகவல் தெரிவித்துள்ள நடிகர் கார்த்தி, குலுமனாலியில் அருவி, சாரல் மழை, மலை பின்னணியில் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டி இருந்தது. அதற்காக கடந்த 4 நாட்களாக குலுமனாலியில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அனைத்தும் நன்றாக போய்க் கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக கனமழை வந்துவிட்டது. நேற்று வரை வானிலை குறித்த எவ்வித முன்னறிவிப்பும் இல்லை.

September 2018

ஷூட்டிங்கிற்காக காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், பாதுகாப்பு கருதி அருகில் உள்ள கிராமத்தில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

துரதிருஷ்டவசமாக படக்குழுவினர் சுமார் 140 பேர் மலை மேல் சிக்கிக் கொண்டனர். அவர்களை தொடர்புக் கொள்ள முடியவில்லை என கார்த்தி தெரிவித்துள்ளார். இந்த இயற்கை பேரிடரினால் ‘தேவ்’ படத்தை தயாரித்து வந்த லக்ஷ்மணனின் ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் ‘தேவ்’ படத்தில் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, விக்னேஷ், வம்சி, நவரச நாயகன் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

Karthi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment