Advertisment

அஜித் பட நடிகையை 'போட்டுத் தள்ளிய' எதிர் நீச்சல் மாரிமுத்து: அப்பவே இவர் அப்படியா?

சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகை படமான இந்த பொம்மை வரும் ஜூன் 16-ந் தேதி வெளியாக உள்ளது.

author-image
WebDesk
New Update
SJ Surya Maarimuthu

எஸ்.ஜே.சூர்யா - மாரிமுத்து

ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ள பொம்மை திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷனுக்காக பேட்டி அளித்துள்ள எஸ்.ஜே.சூர்ய பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். இந்த பேட்டியின் போது எதிர்நீச்சல் நடிகர் மாரிமுத்துவும் பங்கேற்றுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. தொடர்ந்து விஜய் நடிப்பில் குஷி படத்தை இயக்கிய அவர், அடுத்து இயக்கிய நியூ படத்தில் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு அவர் இயக்கிய அனைத்து படத்திலும் அவரே நாயகனாக நடித்து வரும் நிலையில், மற்ற இயக்குனர்களில் படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம் பொம்மை. சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகை படமான இந்த பொம்மை வரும் ஜூன் 16-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதற்காக எஸ்.ஜே.சூர்யா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். இதில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து இணைநதுள்ளார்.

இவர்கள் இருவருமே இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள். எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி படத்திலும் மாரிமுத்து பணியாற்றியுள்ளார். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய மாரிமுத்து பரியேறும் பெருமாள் கொம்பன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார். தற்போது எதிர்நீச்சல் சீரியல் மூலம் சின்னத்திரை மற்றும் பெரியத்திரை என அனைத்திலும் பிரபலமாகிவிட்டார்.



இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யாவுடன் பேட்டியில் பங்கேற்றுள்ள மாரிமுத்து ஆசை படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமாக தகவல்களை பகிர்ந்துள்ளார். அஜித் நாயகனாக நடித்த இந்த படத்தில் சுவலட்சுமி நாயகியாக நடித்திருந்தார். மேலும் கொடூர வில்லன் கேரக்டரில் நடிகர் பிரகாஷ்ராஜ் மிரட்டியிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அஜித் சுவலட்சுமி இணைந்து நடித்த ஒரு காட்சியில் பின்னணியில் ஆங்கிலோ இந்தியன் பாட்டி ஒருவரை நிற்க வைத்துள்ளனர்.

ஆனால் அந்த காட்சி சரியாக வரவில்லை மீண்டும் எடுக்க வேண்டும். அதனால் அந்த பாட்டியை மீண்டும் அழைத்து வா என்று இயக்குனர் வசந்த் சொல்லிவிட்டாராம். ஆனால் மாரிமுத்து அந்த பாட்டி இறந்துவிட்டதாக பொய் சொல்லிவிட்டு வீட்டில் படுத்து தூங்கிவிட்டாராம். அந்த பாட்டி இறந்துவிட்டதாக மாரிமுத்து கூறியதை நம்பிய வசந்த் படப்பிடிப்பில் பிஸியாக இருந்துள்ளார்.

அப்போது எதார்த்தமாக அங்கு வந்த அந்த பாட்டி இயக்குனர் வசந்த்க்கு வணக்கம் கூறியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியான மாரிமுத்து உடனடியாக போய் வசந்திடம் உண்மையை சொல்லிவிட்டாராம். இந்த சம்பவம் எப்போதுமே மறக்க முடியாது என்று எஸ்.ஜே.சூர்யா விழுந்து விழுந்து சிரித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment