Advertisment

முதியவரை தள்ளிவிட்ட விவகாரம்: மன்னிப்பு கேட்ட நடிகர் நாகர்ஜூனா; என்ன நடந்தது?

தெலுங்கில் உருவாகி வரும் குபேரா படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
Nagarjuna Video

நடிகர் நாகர்ஜூனா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தனது பாதுகாவலர்கள் தனது வயதான ரசிகர்களை கீழே தள்ளிவிட்டதை பார்த்தும் கண்டுகொள்ளால் சென்ற தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து, தற்போது இந்த சம்பவத்திற்கு நாகர்ஜூனா மன்னிப்பு கோரியுள்ளார்.

Advertisment

தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகர் நாகேஷ்வர் ராவின் மகன் என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானவர் நாகர்ஜூனா. பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், அவ்வப்போது மற்ற மொழி படங்களிலும் நடிதம்து வருகிறார். அந்த வகையில் தமிழில், இவர் நடித்த ரட்சகன் திரைப்படம், இவருக்காக தமிழில் பெரிய நட்சத்திர பட்டாளம் உருவாக காரணமாக இருந்தது.

தொடர்ந்து தெலுங்கில் வெற்றி பெற்ற நாகர்ஜூனாவின் படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட நிலையில், கார்த்தியுடன் இணைந்து இவர் நடித்த தோழா படம் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனையடுத்து தற்போது குபேரா என்ற படத்தில் நாகர்ஜூனா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். தெலுங்கில் உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இதற்காக படக்குழுவினர் அனைவரும் ஹைதராபாத் வந் நிலையில், நாகர்ஜூனா, தனுஷ், மற்றும் அவரது மகன் என மூவரும் ஒரே நேரத்தில் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது நாகர்ஜூனாவின் வயதான ரசிகர் ஒருவர் அவரை தொட்டு பேச முயன்றபோது, நாகர்ஜூனாவின் பாதுகாவலர்கள் அந்த ரசிகர்களை தள்ளிவிட்டனர்.

இதன் காரணமாக கீழே விழப்போன அவரை அருகில் இருந்தவர்கள் தாங்கிப் பிடித்துக்கொண்ட நிலையில், அவர் என்ன ஆனார் என்பதை கண்டுகொள்ளாமல், நாகர்ஜூனா அப்படியே சென்றுள்ளார். அவருக்கு அடுத்து வந்த நடிகர் தனுஷூம் கண்டுகொள்ளவில்லை. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், நாகர்ஜூனாவின் செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். கூடவே தனுஷுக்கும் கடுமையாக விமர்சனங்கள் எழுந்தது. இந்த பதிவுகள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து தெரிந்துகொண்ட நாகர்ஜூனா தற்போது தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இந்த விஷயம் எனது கவனத்திற்கு வந்துள்ளது. இதுபோன்ற சம்பவம் நடந்திருக்க கூடாது. அந்த வயதான ரசிகரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காது. அப்படி நடக்காத வகையில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Nagarjuna
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment