Advertisment

விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற நெப்போலியன்; கேப்டன் படத்துக்கு மலர் தூவி மரியாதை; பிரேமலதா அளித்த பரிசு

சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு நடிகர் நெப்போலியன் தன்னுடைய மனைவியுடன் சென்று விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

author-image
WebDesk
New Update
nap vijayakant

நடிகர் நெப்போலியன் தனது மனைவியுடன் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று அவருடைய உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் டிசம்பர் 2023-ல் உடல்நலக் குறைவால் காலமானார். விஜயகாந்த் மறைவு குறித்து ரசிகர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், திரையுலக பிரபலங்கள் என பலருக்கும் இன்றைக்கும் துயரத்தை தருவதாக உள்ளது.

Advertisment

இந்நிலையில் விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பரும் நடிகருமான நெப்போலியன் தனது மனைவியுடன் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று அவருடைய உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நடிகரும் முன்னாள் எம்.பி-யுமான நடிகர் நெப்போலியன் சினிமாவில் இருந்தும் அரசியலில் இருந்தும் ஒதுங்கி, தனது மகனி உடலநலக் குறைபாடு காரணமாக அமெரிக்காவில் குடும்பத்துட வசித்து வருகிறார். 

அண்மையில் அமெரிக்காவில் இருந்து தமிழ்நாடு வந்த நெப்போலியன் தன்னுடைய மகனின் நிச்சயதார்த்த நிகழ்வுக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து பத்திரிக்கை கொடுத்தார்.

அதன்படி, நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் நிச்சயதார்த்தம் குறித்து பதிவு ஒன்று வெளியிட்டு இருந்தார். அவருக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகர் நெப்போலியன் தனது மனைவியுடன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே விஜயகாந்த் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நெப்போலியனுக்கு பிரேமலதா விஜயகாந்த் புத்தகம் ஒன்றை பரிசளித்தார். 

நடிகர் நெப்போலியன் தனது நண்பர் விஜயகாந்த்தின் மகன்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்ததும் நெப்போலியன் தன்னுடைய பழைய நினைவுகளை கண் கலங்க பேசி இருக்கிறார். 

விஜயகாந்த் மறைந்தபோது, நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் இருந்தார். அதனால், அவரால் நேரில் வர முடியவில்லை. ஆனால், விஜயகாந்த்தின் மறைவு செய்தி கேட்டு நெப்போலியன் சமூக வலைத்தள பக்கத்தில் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருந்தார். 

நெப்போலியன் விஜயகாந்த் உடன் நடிகர் சங்க பணிகளில் அதிகமாக ஈடுபட்டு இருந்ததையும் அவரைப் போன்ற ஆளுமை மிக்க நபரை பார்க்க முடியாது என்றும் நெப்போலியன் உருக்கமாகப் பேசி இருந்தார்.  மேலும், விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் விருது அவருடைய மறைவுக்கு பிறகு வழங்கப்பட்டது குறித்து நெப்போலியன் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார். இந்த விருதை அவர் உயிரோடு இருக்கும்போதே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த விருது அவருடைய சேவை மற்றும் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று நெப்போலியன் பாராட்டியிருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment