பிறந்த நாள் அன்று பரிசுடன் விஜயகாந்தை பார்க்க சென்ற நடிகர் பார்த்திபன், ஃபோட்டோவுடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ள பதிவு சமூலவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விஜயகாந்த் செல்பி:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் ஓய்வு எடுத்து வருகிறார். சமீபத்தில் மேல் சிகிச்சையாக தனது மனைவியுடன் அமெரிக்கா சென்றிருந்தார். அந்த நேரத்தில் தான் திமுக தலைவர் கலைஞர்ட் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானர்.
அவரின் இறுதி சடங்கில் கூட விஜயகாந்த்தால் கலந்துக் கொள்ள முடியாமல் போனது. இருப்பினும் அமெரிக்காவில் இருந்தப்படி வீடியோ மூலம் கருணாநிதியின் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். 1 வாரம் கழித்து சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார்.
விமானத்தில் இருந்து தரையிறங்கியதும் நேராக மெரினாவில் இருக்கும் கருணாநிதியின் நினைவு இடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நினைவிடத்திற்கு விஜயகாந்த் நடந்து வந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவியது.
அப்போதே, அவர் உடல்நலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பபட்டன. இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி விஜயகாந்த் தனது 66வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.விஜயகாந்தின் பிறந்தநாளுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் மனதார வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அவரை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்ல நடிகர் பார்த்திபர் விஜயகாந்தின் இல்லத்திற்கு சென்றிருந்தார்.
விஜயகாந்திற்கு பிறந்த நாள் பரிசாக ஒரு மெழுகு விளக்கையும் பார்த்திபன் எடுத்து சென்றார். அப்போது பார்த்திபனை பார்த்த விஜயகாந்த் அவரிடம் உரையாடியுள்ளார். இருவரும் செல்பியும் எடுத்துள்ளனர். இதுக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பார்த்திபன் பதிவிட்டிருப்பதாவது,
“முன் தின தளபதி, நேற்று நம்மவர் இன்று கேப்டன்! அழகு மெழுகு விளக்கை பிறந்தநாள் பரிசாக அளித்து சந்தித்தேன். மனதில் பாரமும் இமையில் ஈரமும் கண்டவர் நாலே மாதத்தில் பழைய மிரட்டலுடன் காணப்போகிறீர்கள் என நம்பிக்கை அளித்தார்” என்று கூறியுள்ளார்.
4 மாதத்தில் பழைய மிரட்டலுடன் திரும்பி வருவேன் என்று விஜய்காந்த் கூறியிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.