/tamil-ie/media/media_files/uploads/2023/06/Tulasi.jpg)
நடிகை துளசி
50 வயது நடிகையை காதலிப்பதாக வெளியான தகவலுக்கு பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் சீனு விளக்கம் அளித்துள்ளார்.
எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் கமல்ஹாசன் அம்பிகா நடித்த சகலகலா வல்லன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை துளசி. தொடர்ந்து தமிழில் ஒருசில படங்களில் அக்கா, அண்ணி, தங்கை உள்ளிட்ட கேரக்டர்களில் நடித்த துளசி நல்லவனுக்கு நல்லவன் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார்.
தற்போது 50-வயதாகும் இவர், தென்னிந்திய சினிமாவில் முக்கிய குணச்சித்திர நடிகையாக வலம் வருகிறார். சினிமா வாய்ப்புடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் சீனுவுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Tulasi-Bharabhas.jpg)
இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரபாஸ் சீனுவை துளசி அன்போடு டார்லிங் டார்லிங் என்று அழைப்பதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பிரபாஸ் சீனு – துளசி இருவரும் காதலிப்பதாக வதந்திகளை பரப்பி விட்டுள்ளனர். இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், இது குறித்து இருவருமே மௌனம் காத்து வந்ததால், இந்த தகவல் உண்மை தானா என்ற சந்தேகம் இருந்தது.
ஆனால் சமீபத்தில் பேட்டி அளித்த நடிகர் பிரபாஸ் சீனு, 50 வயது வித்தியாசம் பார்க்காமல் எப்படி இவ்வாறு வதந்தியை பரப்புகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. துளசி எனக்கு அம்மா போன்றவர். படப்பிடிப்பு தளத்தில் அவர் என்மீது அக்கறையோடு நடந்துகொள்வார். இது ஒரு அம்மாவுக்கும் மகனுக்கும் உள்ள உறவு. அவர் ஒரு சிறந்த நடிகை. வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து தான் இந்த நிலைக்கு வந்துள்ளார்.
எங்களை பற்றி பரவிய வதந்தியை என் மனைவியிடம் சொன்னேன். இதை கேட்டு அவர் சிரித்தார். என் மனைவி மிகவும் பக்குவமானவர். இதுபோன்ற வதந்திகளை அவர் காதில் வாங்கிக்கொள்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.