அஜித் குமார் நடிப்பில் துணிவு படமும், விஜய் நடிப்பில் வாரிசு படமும் பொங்கல் களத்தில் குதித்துள்ளன. இந்த இரண்டு படத்தில் எது வெற்றிப் பெற போகிறது என டாக் கோடம்பாக்கத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் நடிகர் பிரபுவிடம் வாரிசு, துணிவு இரண்டு படத்தில் எதை முதலில் பார்ப்பீர்கள் என கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், இரண்டு படமும் நன்றாக போகட்டும். இருவரும் என் தம்பிகள்தான் என்றார். நடிகர் பிரபு தற்போது காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் என்ற படத்தில் நடித்துவருகிறார்.
ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை முத்தையா இயக்கிவருகிறார். வாரிசு, துணிவு இரண்டு படமும் ஜன.11ஆம் தேதி வெளியாகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/