யாருமே கேட்காத கேள்வி, விஜய் என்னை பார்த்து கேட்டாரு; மறக்க முடியாது நினைவுகளை சொன்ன ராதாரவி!

யாரும் கேட்காத அறிவான கேள்வியை நடிகர் விஜய் என்னை பார்த்து கேட்டார் என நடிகர் ராதா ரவி தெரிவித்துள்ளார்.

யாரும் கேட்காத அறிவான கேள்வியை நடிகர் விஜய் என்னை பார்த்து கேட்டார் என நடிகர் ராதா ரவி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
radha

யாருமே கேட்காத கேள்வி, விஜய் என்னை பார்த்து கேட்டாரு; மறக்க முடியாது நினைவுகளை சொன்ன ராதாரவி!

நடிகர் ராதா ரவி தமிழ் திரைப்படத்துறையில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளவராக அறியப்படுகிறார். புகழ்பெற்ற நடிகரும் அரசியல்வாதியுமான எம்.ஆர். ராதாவின் மகனாகப் பிறந்த அவர், திரையுலகில் தந்தையின் தாக்கத்தை தாண்டி, தன்னை ஒரு தனிப்பட்ட நடிகராக நிறுவியவர். 

Advertisment

1970-களின் இறுதியில் சினிமாவில் அறிமுகமான ராதா ரவி, 1980 மற்றும் 1990-களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் சிறந்து விளங்கினார். அவரது தனித்துவமான குரலும், மேடை போல் பேசும் பாணியும், பல படங்களில் அவரது பாத்திரங்களை மறக்க முடியாதவையாக மாற்றின.

‘வைத்தேகி காத்திருந்தாள்’, ‘புலன் விசாரணை’, ‘அமைதி படை’, ‘பாஷா’, ‘செத்துப்பதி ஐ பி எஸ்’, ‘சின்ன தம்பி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவர் நடித்த கதாப்பாத்திரங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவர் ஒரு திறமையான டப்பிங் கலைஞராகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

மலையாளம் மற்றும் தெலுங்கில் இருந்து தமிழுக்கு பல நடிகர்களுக்கான குரலை கொடுத்துள்ளார். திரையரங்க சங்கங்களில் இயங்கிய அனுபவம், அவரது தொழில்முறை அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்களில் உறுப்பினராகவும், செயல்பாடுகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளார்.

Advertisment
Advertisements

அவருடைய நேரடியான பேச்சுகள் சில சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், தனது கருத்துகளில் உறுதியுடன் நிலைத்திருந்தவர். வில்லனாக, தந்தையாக, அதிகாரியாக, அரசியல்வாதியாக என பலவிதமான கதாபாத்திரங்களில் கலையாற்றிய ராதா ரவியின் சினிமா பயணம், தமிழ் திரையுலகத்தில் முக்கிய பங்களிப்பாகக் கருதப்படுகிறது. 

இந்நிலையில், நடிகர் ராதா ரவி யாரும் கேட்காத கேள்வியை நடிகர் விஜய் என்னிடம் கேட்டார் என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, “சர்கார்’ படத்தில் நடித்து கொண்டிருந்த போது அப்பா ஷூட்டிங் கேஸ் எப்போது நடந்தது என்று விஜய் என்னிடம் கேட்டார். நான் 1967 என்று கூறினேன். 

அப்போது மாலைக்குள் உங்கள் வீட்டில் தெரிந்திருக்கும் அல்லவா? ஷூட்டிங் கேஸ் நடந்து விட்டது. இரண்டு பேர் மருத்துவமனையில் படுத்திருக்கிறார்கள் எல்லாம் தெரிந்திருக்கும் அல்லவா. அப்போது உங்க வீட்டின் நிலைமை எப்படி இருந்தது என்று கேட்டார். இவ்வளவு அறிவான கேள்வியை சினிமாத் துறையில் இருந்து யாரும் என்னிடம் கேட்கவில்லை” என்றார்.

Cinema Radharavi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: