அந்த சாமியாரை கும்பிட்டு வந்தவங்களாம் சொல்றாங்க கெடுத்தது பற்றி : ராதாரவி சர்ச்சை பேச்சு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
radha ravi, ராதாரவி

radha ravi, ராதாரவி

நாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் மி டூ விவகாரத்தில் சின்மயி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை கடுமையாக சாடி ராதாரவி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisment

கடந்த சில நாட்களாகா கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களும் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததும் அவருடன் பல்வேறு பெண்களும் #METOO என்ற ஹேஸ்டேகில் இணைந்து தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

மி டூ விவகாரம் குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு :

பாடகி சின்மயி, வைரமுத்துவிடம் மற்றும் நின்று விடாமல் பெண்களுடன் தவறாக நடந்து கொண்டதாக கூறி பல்வேறு பிரபலங்களின் பெயரை கூறி வருகிறார். அந்த வகையில் பிரபல வில்லன் நடிகர் ராதா ரவியும் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார் என்று ட்விட்டரில் குற்றச்சாட்டை முன்வைத்தார் சின்மயி.

Advertisment
Advertisements

இந்நிலையில் சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ராதாரவி இது குறித்து பேசிய போது , “போகிற போக்கில் யாரோ என் பெயரையும் சொல்லிட்டு போயாச்சு. நாங்க வில்லன் குடும்பம் வேற. இப்படி சொன்னா உடனே நம்பிடுவாங்க வேற. அனால் அது பற்றி எனக்கு கவலை இல்லை. சாமியார் எல்லாம் கெடுக்கிறான் அது பற்றி பேச மாட்டேங்கிறாங்க. அந்த சாமியார் கிட்ட போயி கும்பிட்டு வந்தவங்களாம் சொல்றாங்க இவன் கெடுத்துட்டான் அவன் கெடுத்துட்டான். நீ போனியே அந்த சாமியார் கெடுத்தாரா அத முதலில் சொல்லு.” என்று பேசியுள்ளார்.

மேலும், சின்மயி தன் வைத்துள்ள குற்றச்சாட்டு போலியானது என்றும் நான் தவறு செய்தால் என் மீது வழக்கு போடுங்கள், நான் தயார். இவ்வாறு பேசி உங்கள் தரத்தை நீங்களே குறைத்துக்கொள்ளாதீர்கள் என்றும் பேசியுள்ளார்.

Chinmayi Radharavi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: