/indian-express-tamil/media/media_files/2025/09/10/screenshot-2025-09-10-171119-2025-09-10-17-11-42.jpg)
நடிகர் ராதா ரவி தமிழ் திரைப்படத்துறையில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளவராக அறியப்படுகிறார். புகழ்பெற்ற நடிகரும் அரசியல்வாதியுமான எம்.ஆர். ராதாவின் மகனாகப் பிறந்த அவர், திரையுலகில் தந்தையின் தாக்கத்தை தாண்டி, தன்னை ஒரு தனிப்பட்ட நடிகராக நிறுவியவர். 1970களின் இறுதியில் சினிமாவில் அறிமுகமான ராதா ரவி, 1980 மற்றும் 1990களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் சிறந்து விளங்கினார். அவரது தனித்துவமான குரலும், மேடை போல் பேசும் பாணியும், பல படங்களில் அவரது பாத்திரங்களை மறக்க முடியாதவையாக மாற்றின.
‘வைத்தேகி காத்திருந்தாள்’, ‘புலன் விசாரணை’, ‘அமைதி படை’, ‘பாஷா’, ‘செத்துப்பதி ஐ பி எஸ்’, ‘சின்ன தம்பி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவர் நடித்த கதாப்பாத்திரங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவர் ஒரு திறமையான டப்பிங் கலைஞராகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்; மலையாளம் மற்றும் தெலுங்கில் இருந்து தமிழுக்கு பல நடிகர்களுக்கான குரலை கொடுத்துள்ளார். திரையரங்க சங்கங்களில் இயங்கிய அனுபவம், அவரது தொழில்முறை அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்களில் உறுப்பினராகவும், செயல்பாடுகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளார்.
அவருடைய நேரடியான பேச்சுகள் சில சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், தனது கருத்துகளில் உறுதியுடன் நிலைத்திருந்தவர். வில்லனாக, தந்தையாக, அதிகாரியாக, அரசியல்வாதியாக என பலவிதமான கதாபாத்திரங்களில் கலையாற்றிய ராதா ரவியின் சினிமா பயணம், தமிழ் திரையுலகத்தில் முக்கிய பங்களிப்பாகக் கருதப்படுகிறது. இவர் ஒரு பழைய நேர்காணலில் கமல்ஹாசன் நடித்து மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'நாயகன்' படத்தை பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.
நாயகன் என்பது 1987ஆம் ஆண்டு வெளியான, தமிழ் சினிமாவின் முக்கியமான மற்றும் கலாச்சார ரீதியாக தாக்கம் செய்த ஒரு படமாகும். மணிரத்னம் இயக்கிய இந்தப் படம், மும்பையின் அண்டர் வேர்ல்டு டான் வரதராஜன் முபாரக் என்பவரின் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டது. கமல் ஹாசன் இந்த படத்தில் வேலு நாயக்கர் என்ற கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
இதை பற்றி ஒரு நேர்காணலில் ராதா ரவி அவர்கள் பேசுகையில், "அது என்னமோ தெரியலை, நாயகன் படத்தை பார்க்கும் போது முதல் முறை பார்த்த போதும் அழுகை வந்தது, இப்போது வயது ஆகி விட்டது ஆனால் இப்போதும் அழுகை வந்தது. அருமையான நடிப்பு, அந்த நடிப்பெல்லாம் வேறு யாருக்கும் வராது. ஒரு சீன் மட்டும் வார்த்தைகளே இல்லாமல் நடித்திருப்பார். அவ்வளவு அருமையாக இருக்கும் அது." என்று மனா நெகிழ்ந்து கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.