'வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்'... 38 ஆண்டுக்குப் பின் ரீ-ரிலீஸாகும் ரஜினியின் ஆக்சன், த்ரில்லர் படம்!

ரஜினியின் ஆக்‌ஷன் - த்ரில்லர் படமான 38 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்படுவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ரஜினியின் ஆக்‌ஷன் - த்ரில்லர் படமான 38 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்படுவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
raj

'வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்'... 38 ஆண்டுக்குப் பின் ரீ-ரிலீஸாகும் ரஜினியின் ஆக்சன், த்ரில்லர் படம்!

திரைத்துறையில் படிப்படியாக உயர்ந்த மனிதர்களுள் நடிகர் ரஜினியும் ஒருவர். ஆரம்ப காலக் கட்டத்தில் தனது தனித்துவமான உடல்மொழி, ஸ்டைல், வசனங்கள் ஆகியவற்றால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் கண்ணாடி அணிவது, ஸ்டைலாக நடப்பது, சட்டை காலரைத் தூக்கிவிடுவது போன்ற சின்ன சின்ன அசைவுகளை கூட ரசிகர்கள் செய்து பார்த்த நாட்களும் உண்டு.

Advertisment

தனது தனித்துவமான ஸ்டைலினால் நடிப்பை துவங்கிய நடிகர் ரஜினி ஆரம்ப காலக்கட்டத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். பின்னர் கதாநாயகனாக உயர்ந்தார். எதிர்மறை கதாபாத்திரங்களில் அவர் காட்டிய தீவிரம் கதாநாயகனாக உருவெடுக்க வழிவகுத்தது.

பாசமான, துணிச்சலான மற்றும் பொறுப்பான கதாபாத்திரங்களில் வெளிப்படுத்திய உணர்ச்சிபூர்வமான நடிப்பு என பல பரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்தினார். 'பைரவி', 'முரட்டுக்காளை', 'முள்ளும் மலரும்', 'படிக்காதவன்', மற்றும் 'மனிதன்' போன்ற திரைப்படங்கள் அவரது நடிப்புத் திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்.

அந்த வரிசையில் 'மனிதன்' திரைப்படம் ரஜினிகாந்தின் சினிமா கேரியரில் ஒரு மைல்கல் என்றே கூறலாம். கடந்த 1987-ஆம் ஆண்டு புகழ்பெற்ற இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மனிதன்’.

Advertisment
Advertisements

இந்த படத்தில்  ரஜினிகாந்த், ரூபினி, மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் ஒரு அதிரடி, நகைச்சுவை, மற்றும் உணர்ச்சிகரமான கலவையாகும். இப்படம் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதுடன் மாபெரும் வெற்றியடைந்தது.

இப்படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது சந்திரபோஸ் இசையமைத்த பாடல்கள். குறிப்பாக, வானத்த பாத்தேன், தீபங்களே நீங்கள், காளை... காளை, ஏதோ நடக்கிறது, முத்து..முத்து, பெண்ணே.. போன்ற பாடல்கள் இன்றும் பலராலும் விரும்பப்படுகின்றன.

இந்நிலையில், ‘மனிதன்’ திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. அக்டோபர் 10-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. ‘மனிதன்’ திரைப்படத்தை 38 ஆண்டுகளுக்கு முன்னர் திரையரங்கள் பார்க்க தவறியவர்களுக்கு இது ஒரு பொன்னான் வாய்ப்பாகும்.

சமீபகாலமாக பழைய படங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்டு  ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. இது அந்த காலத்தை நினைவில் நிறுத்தும் வாய்ப்பாக ரசிகர்களுக்கு அமைந்துள்ளது. அந்த காலத்தில் திரையரங்கில் சென்று படத்தை பார்க்க முடியாத ரசிகர்கள் தற்போது ரீ ரிலீஸ் மூலம் அந்த படங்களை பார்த்து உற்சாகமடைந்து வருகின்றனர்.

Cinema Rajini

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: