பெரியாருக்கும் திராவிட கருத்தியலுக்கும் எதிராக புலம்புவோர்களை பார்த்து அனுதாபம்தான் தெரிவிக்கமுடியும் என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, " தந்தை பெரியாருடைய திராவிட கருத்தியலின் அடிநாதமான சமூக நீதி கோட்பாட்டை பொது மேடைகளில் விளக்கிச் சொல்லி உண்மையான விளக்கத்தை சொல்லி அதில் என்னென்ன குறைகள் இருக்கிறது, என்னென்ன தகவல்கள் இருக்கிறது, நாங்கள் வந்தால் இதையெல்லாம் மாற்றி காட்டுவோம் என்று பேசுவதில் ஒரு நியாயம் உள்ளது.
ஏதோ அரசியல் செய்தோமே என்பதற்காக புதிது புதிதாக பேசுபவர்களைப் பார்த்தால் கோபம் வரவில்லை பரிதாபமாக இருக்கிறது. பெரியாருக்கு எதிராகவும் திராவிட கருத்தியலுக்கு எதிராகவும் புலம்புவர்களை பார்த்து பரிதாபப்பட்டு அவருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை மட்டும் தான் தெரிவிக்க முடியும்.
ஏனென்றால் இந்த கருத்தின் மீது விமர்சனம், தனிமனிதனப் போக்கில் விமர்சனம் இது மட்டும் தான் உள்ளது. கருத்தியலில் விமர்சனம் இல்லை என்பதை இத்தனை கட்சிகள் தெரிவித்துள்ளன.
அதனால் அவர்களுக்கு சாதாரண பெரியாரின் தொண்டன் என்ற முறையில் நன்றியை கூறிக்கொண்டு இந்த புலம்பல்களுக்கும் புலம்பும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.