முதல் படத்துல பிச்சைக்காரன், 2-வது லூசா? செலக்ட் பண்ணிட்டுதான் எழுதுறாங்களோ? சிங்கம்புலி மனைவி சந்தேகம்!

நடிகர் சிங்கம் புலி தனது முதல் இரண்டு படங்களில் நடித்த அனுபவம் குறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார்.

நடிகர் சிங்கம் புலி தனது முதல் இரண்டு படங்களில் நடித்த அனுபவம் குறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
singampuli

முதல் படத்துல பிச்சைக்காரன், 2-வது லூசா? செலக்ட் பண்ணிட்டுதான் எழுதுறாங்களோ? சிங்கம்புலி மனைவி சந்தேகம்!

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வருபவர் சிங்கம் புலி. இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் இருந்துள்ளார். ‘மாயாண்டி குடும்பத்தார்’, ’கோரிப்பாளையம்’, ‘மிளகா’, ‘தூங்கா நகரம்’, ‘தேசிங்கு’ உட்பட பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். 

Advertisment

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். இந்தப் படத்தில் அவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகர் என்பதை தாண்டி இயக்குநராக அறியப்படும் சிங்கம் புலி, நடிகர் அஜித் நடித்த ‘ரெட்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தின் கதை மற்றும் பாடல்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

 இதையடுத்து நடிகர் சூர்யா, ஜோதிகா நடிப்பில் இவர் இயக்கிய ‘மாயாவி’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதுமட்டுமல்லாமல் நடிகர் சிங்கம் புலி ’உனக்காக எல்லாம் உனக்காக’, ’ராஜா’, ’ஆஞ்சநேயா’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகவும்  பணியாற்றியிருக்கிறார். இவர் பல படங்களில் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார்.  இவ்வளவு ஏன் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’டாப் குக்கு டூப் குக்கு’ என்ற சமையல் தொடர்பான ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு சமையலிலும் வித்தகராக ஜொலித்தார்.

இப்படி பன்முகத் தன்மைக் கொண்ட நடிகர் சிங்கம் புலி ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தில்  தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து கூறியுள்ளார். அவர் பேசியதாவது, "மாயாண்டி குடும்பத்தார் படப்பிடிப்பு தளத்தில் உள்ளே போனதும் எல்லா இயக்குநர்களும் அவர்களுக்கு என்று வைத்திருந்த ஆடையே போட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். கடைசியாக ஒரு பனியனும், ட்ரவுசரும் மட்டுமே இருந்தது. அப்போது நான் லூசாக நடிக்க மாட்டேன் என்று கூறினேன். 

Advertisment
Advertisements

அப்போது என் மனைவி  முதல் படத்தில் பிச்சைக்காரன் கதாபாத்திரம் இரண்டாவது படத்தில் லூசு கதாபாத்திரமா? எழுதிவிட்டு ஆள் எடுப்பார்களா? இல்லை ஆட்களை தேர்வு செய்திவிட்டு எழுதுவார்களா? என்று கேட்டார். அந்த படத்தில் ஒரு காட்சி வரும் ஒரு பெண் ஜி.எம்.குமாருக்கு சாப்பாடு வைப்பார். அப்போது அவரோட பையன் எனக்கும் சாப்பாடு வைப்பார். அப்போது அந்த பெண்மனியிடம் நான் ஏய் குழம்பு ஊற்று என்று சொன்னேன் அதற்கு அவர் அப்படி சொல்லக் கூடாது சித்தி குழம்பு ஊற்று என்று சொல்ல வேண்டும் என்றார்.

அப்போது ஜி.எம்.குமாரிடம் நான் எப்பா தினமும் இந்த சித்தி நமக்கு குழம்பு ஊத்துமா என்பேன் அதற்கு அவர் ஆமா என்பார். அப்ப நீ செத்துபோயிட்டா இந்த சித்திய வைச்சு நான் குழம்பு ஊத்துறேன் என்றேன். இந்த மாதிரியான காட்சிகள் எல்லாம் படத்தின் நீளம் அதிகமானதால் குறைக்கப்பட்டது. நாம் எதையோ ஒன்றை தேடி போனோம். ஏதோ ஒன்று கிடைத்தது அதை மக்கள் பாராட்டிவிட்டார்கள்” என்றார்.

Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: