தங்களது அப்பா நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கு பங்கு கொடுக்கவில்லை என்றும், அப்பா எழுதியது போன்று பிரபு மற்றும் அவரது சகோதரர் ராம்குமார் காட்டிய உயில் உண்மை இல்லை என்றும், நடிகர் சிவாஜியின் மகள்கள் வாதமிட்டுள்ளனர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் படங்களில் நடித்துக்கொண்டிருந்த காலத்தில் ஏராளமான சொத்துக்களை வைத்திருந்தார். தற்போது 250 கோடிக்கு அதிகமான அந்த சொத்துக்களை நடிகர் பிரபு மற்றும் அவரது அண்ணன் ராம்குமார் ஆகியோர் அனுபவித்து வருகினறனர். இந்நிலையில், தங்களது தந்தை சிவாஜியின் சொத்தக்களில் தங்களுக்கு சேர வேண்டிய பங்கை பெற்றுத்தருமாறு அவரின் மகள்கள் சாந்தி, ராஜ்வி இருவரும் சகோதரர்கள் ராம்குமார் பிரபு ஆகியோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடரப்பட்ட இந்த வழக்கில், சிவாஜி கணேசன் எழுதி வைத்த உயில் படித்தான் சொத்தக்களை அனுவித்து வருவதாக பிரபு ராம்குமார் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், சிவாஜி மகள்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அனைத்து சொத்துக்களிலும் சகோதரிகளுக்கு சம பங்கு இருப்பதாக முதலில் ராம்குமார் கூறினார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு சகோதரிகள் சாந்தி, ராஜ்வி, மற்றும் சகோதரர் பிரபுவிடம் இருந்து பொது அதிகார பத்திரத்தை எழுதி ராம்குமார் எழுதி வாங்கியுள்ளார். இதனிடையே 1999-ம் ஆண்டு பதிவு செய்யப்படாத நடிகர் சிவாஜினியின் உயில் 2021-ம் ஆண்டு வெளி வந்துள்ளது. இந்த உயிலில் மகள்கள் இருவருக்கும் சொத்தில் உரிமை இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது ஒரு ஜோடிக்கப்பட்ட உயில், இதை நடிகர் சிவாஜி எழுதியதாக கூறப்படுவதில் உண்மையில்லை. இந்த உயில் எண்மை என்பதற்கும் எந்த சான்றும் இல்லை. இதனிடையே சொத்தில் பாகபிரிவினை செய்யக்கோரி கடந்த 2021 ம் ஆண்டு சாந்தி ராஜ்வி இருவரும் ராம்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த நோட்டீஸ்க்கு ராம்குமார் அளித்த பதிலில் தான் நடிகர் சிவாஜி எழுதியதாக உயிலை காட்டியுள்ளார்.
இதனிடையே சாந்தி தியேட்டரில் இருந்த சிவாஜியின் 50 சதவீத பங்குகளும், தாயாரில், 650 சதவீத பங்குகளும், ராம்குமார் மற்றும் அவரது சகோதரர் பிரபு இருவரும் தங்களது மகன்களில் பெயருக்கு முறைகேடாக மாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“