சமீபத்தில் நடந்த திருமண நிகழ்வு ஒன்றுக்கு வந்த நடிகர் விஜய்யின் பெற்றோருடன் இணைந்து நடிகர் சூர்யா எடுத்துக்கொண்ட செல்பி வைரலாகிறது.
சூர்யாவின் தந்தை சிவகுமார் மற்றும் தம்பி கார்த்திக் செல்ஃபிக்கு எதிராக தங்களது கருத்துக்களையும் , செயல்களையும் பதிவு செய்து வரும் நிலையில் நடிகர் சூர்யா, விஜய்யின் பெற்றோருடன் செல்ஃபி எடுத்திருப்பது இணையத்தளத்தில் சலசலப்பு ஏற்படுத்தியிருக்கிறது.
செல்ஃபி என்றாலே பிடிக்காது என சொல்லும் திரையுலகினர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது நடிகர் சிவகுமார் தான். செல்பி எடுக்க முயன்ற இரண்டு ரசிகர்களின் செல்போனையும் அவர் தட்டிவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. அன்றிலிருந்து நெட்டிசன்கள் பலரும் அவரை சாடி பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் பெற்றோருடன் நடிகர் சூர்யா செல்பி
மேலும், ஜூலை காற்றிலே படத்திற்கான பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்திக் பேசும்போது, “செல்ஃபிக்கு மரியாதையே இல்லாமல் போய்விட்டது. கேட்டுவிட்டு புகைப்படம் எடுப்பது என்றில்லை. முகத்துக்கு முன்னால் கேமராவை கொண்டு வந்து வைக்கிறார்கள். அதிலும் பின்னால் ஒரு பிளாஷ், முன்னால் ஒரு பிளாஷ். அது கண்ணில் பட்டால் என்ன ஆகும்? இப்படி இங்கு சொன்னால் தான் உண்டு. வேறு எங்கும் இதனை சொல்ல முடியாது” என்றார். இந்த நிகழ்வு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#Surya Taking Selfie with #Thalapathy 's parents #Chandrasekhar & #SobhaChandrasekhar????
Friend ship goals.. ❤ pic.twitter.com/7rUtn4MDxz
— ActorVijayFC (@ActorVijayOfcl) 6 March 2019
இந்நிலையில், சிவகுமாரின் முதல் மகனும், கார்த்தியின் அண்ணனுமான நடிகர் சூர்யா சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யின் பெற்றோருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி மிகவும் பிரபலமாகி வருகிறது. இதனால் சமூக வலைத்தளம் முழுவதும் இதுவே இன்றைய டாக்காக இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.