Advertisment

படப்பிடிப்பில் சூர்யா - பாலா மோதல்? விளக்கம் அளித்த படக்குழுவினர்… நடந்தது என்ன?

இயக்குனர் பாலா - நடிகர் சூர்யா இணைந்து உருவாகிவரும் சூர்யா 41 படப்பிடிப்பு தளத்தில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் சூர்யா படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
படப்பிடிப்பில் சூர்யா - பாலா மோதல்? விளக்கம் அளித்த படக்குழுவினர்… நடந்தது என்ன?

இயக்குனர் பாலா - நடிகர் சூர்யா இணைந்து உருவாகிவரும் சூர்யா 41 படப்பிடிப்பு தளத்தில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் சூர்யா படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

Advertisment

நடிகர் சூர்யாவின் ஆரம்பகால படங்கள் அவருக்கு பெரிய அளவில் வெற்றிப் படங்களாக அமையவில்லை. நேருக்கு நேர், உன்னை நினைத்து, ஃபிரண்ட்ஸ் போன்ற சில படங்களே அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன. நடிகர் சூர்யா இயகுனர் பாலாவுடன் இணைந்த பிறகு, அவருடைய நடிப்பில் மாற்றம் தெரிந்தது. நந்தா, பிதாமகன் போன்ற பாலாவின் படங்களில் சூர்யா தனது நடிப்பு முத்திரையைப் பதித்தார். இதனால், பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே ஒரு சகோதரப் பாச பிணைப்பு இருப்பதை வெளிப்படுத்தி வந்துள்ளனர். அதே நேரத்தில், சூர்யா காக்க காக்க, வாரணம் ஆயிரம், சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் பெரும் வெற்றி பெற்று சினிமாவில் நட்சத்திரமாக உயர்ந்தார்.

நடிகர் சூர்யா சினிமாவில் நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

ஆனால், இயக்குனர் பாலாவுக்கு அவன் இவன் படத்துக்கு பிறகு திரைப்படங்கள் சரியாக அமையவில்லை. நடிகர் விக்ரமின் மகன் துருவ், இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நடித்த வர்மா படத்தில் பிரச்னை ஏற்பட்டு அப்படம் மீண்டும் வேறொரு இயக்குனரை வைத்து இயக்கப்பட்டது. பாலா இயக்கிய படமும் ஒடிடியில் வெளியானது.

அடுத்து பாலா என்ன படம் இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில், நடிகர் சூர்யா, இயக்குனர் பாலாவுடன் புதிய படத்தில் இணைகிறார் என்று செய்தி வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, பாலாவும் சூர்யாவும் இணைகிறார்கள் என்றா செய்தி இருவருடைய ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியது.

சூர்யா 'எதற்கும் துணிந்தவன்' படத்தை தொடர்ந்து, இயக்குனர் பாலா இயகத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு தற்காலிகமாக 'சூர்யா 41' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கிறார். இப்படத்தை சூர்யாவின் '2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதியில் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. கன்னியாகுமரியில் நடைபெற்று வந்த முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து சூர்யா 41 படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பிற்காக செட் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வேலைகள் முடிந்த பிறகு ஜூன் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே, சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே ஏற்பட்ட திடீர் மோதல், காரணமாக சூர்யா படப்பிடிப்பில் இருந்து வெளியேறிவிட்டார் என்றும் அதனால், படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது என தகவல் வெளியாக் இ பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அதில், சூர்யா 41 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததன் காரணமாக தான் நடிகர் சூர்யா சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை வருகிற ஜூன் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சூர்யா படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஊடகங்களிடம் கூறுகையில், “அந்த தகவல் முற்றிலும் தவறானது. பாலா, சூர்யா கூட்டணியில் தயாராகும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி, ராமேசுவரம் பகுதிகளில் மிகுந்த புரிதலுணர்வுடன் நடைபெற்று திட்டமிட்ட தேதியில் முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் கோவாவில் தொடங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Cinema Bala Surya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment