சூர்யா தயாரிப்பில், ஜோதிகா நடிக்க இருக்கும் காமெடி படத்தில் தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களாகக் கருதப்படும் 3 இயக்குநர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளனர்.
2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில், சூர்யா தயாரித்து, ஜோதிகா நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சூர்யா, கிளாப் அடித்துப் படப்பிடிப்பை தொடக்கி வைத்தார்.
இந்த விழாவில் சூர்யா, ஜோதிகா, ரேவதி, நடிகர்கள் ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், இயக்குநர் பிரம்மா, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ் ஆர் பிரபு ,படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன், படத்தின் இயக்குநர் கல்யாண் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஜோதிகா படத்தில் நடிக்கும் 3 இயக்குநர்கள்
பிரபுதேவா நடித்த குலேபகாவலி படத்தை இயக்கிய இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் இப்படம் காமெடி படமாக உருவாகிறது. மேலும் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும் இந்தக் கதையில் வித்தியாசமான கேரக்டரில் ஜோதிகா நடிக்கவிருக்கிறார். இவருடன் நடிகை ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
![](https://indianexpressonline.files.wordpress.com/2019/02/tamil-faceboof-gif.gif )
இந்த படத்தில், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான பாரதிராஜா, கே.பாக்யராஜ், பார்த்திபன் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்கள் மூன்று பேரும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்கள்.
![](https://indianexpressonline.files.wordpress.com/2019/02/tamil-twitter-follow-gif.gif )
இந்தப்படத்திற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே நடிகை ஜோதிகா அறிமுக இயக்குநர் ராஜ் இயக்கத்தில் ஆசிரியையாக நடித்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.