Advertisment

விஜய் மக்கள் மன்றம் திடீர் ஆலோசனை: பனையூரில் குவிந்த நிர்வாகிகள்

ரசிகர்கள் முதலில் குடும்பம் மற்றும் தொழிலை பார்க்க வேண்டும். அதன்பிறகுதான் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்

author-image
WebDesk
New Update
விஜய் மக்கள் மன்றம் திடீர் ஆலோசனை: பனையூரில் குவிந்த நிர்வாகிகள்

ஹைதராபாத்தில் இருந்து படபப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள தனது இல்லத்தில் மக்கள் இயக்க நிர்வாகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு படம் வெளியாக உள்ளது. தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் நடிகர் விஜய் கடந்த 2009-ம் ஆண்டு முதல் மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தை தொடங்கி மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.

இதில் சமீபத்தில் நடந்து முடிந்த ஊராட்சி மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜயின் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். விஜய் இதுவரை அரசியல் தொடர்பான கருத்துக்களை அதிகம் பேசவில்லை என்றாலும் கூட அரசியலில் நுழைவதற்காக சில ஆண்டுகளாக தனது நிர்வாகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு முன்னோட்டமாக தான் மக்கள் இயக்க நிர்வாகள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டனர் என்று தகவல்’ வெளியாகியுள்ளது.

ஊராட்சி மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஓராளவு வெற்றி பெற்ற மக்கள் இயக்கம் அடுத்து சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வரும் 2024-ம் ஆண்டு இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது குறித்து ஆலோசனை நடத்தவே விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திதுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை பனையூரில் உள்ள மக்கள் இயக்கம் அலுவலகத்தில், இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில். இயக்கத்தை பலப்படுத்துவது மற்றும் அரசியல் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டத்திற்கு பின்னர் ரசிகர்கள் மத்தியில் பேசிய புஸ்ஸி ஆனந்த், ரசிகர்கள் முதலில் குடும்பம் மற்றும் தொழிலை பார்க்க வேண்டும். அதன்பிறகுதான் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் வருமானத்தின் ஒரு பகுதியை இயக்கத்தின் செயல்பாடுகளுக்காக செலவிட வேண்டும் யாரிடமும் கடன் வாங்க கூடாது என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment