மக்கள் இயக்கத்தின் செய்ல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக நடிகர் விஜய் இயக்க நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வரும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, ஷாம், யோகிபாபு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர்.
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இயக்கி வரும் இந்த படத்திற்கு தமன் இசையைமத்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான ரஞ்சிதமே, மற்றும் தி தளபதி உள்ளிட்ட 2 பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாரிசு படம் வரும் ஜனவரி 122—ந் தேதி வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து விஜய் அடுத்து தனது 67-வது படமாக லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக தளபதி 67 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற உள்ளது. இதனிடையே தனது மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்ய இயக்க நிர்வாகிகளை விஜய் சந்தித்துள்ளார்.
நடிப்பு மட்டுமல்லாமல் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ள விஜய் இதன் மூலம் மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் போட்டியிட்ட வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றிவாகை சூடியுள்ளனர்.
இதனால் அடுத்து 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் விஜயின் மக்கள் இயக்கம் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்திக்கிறார். இதில் முதற்கட்டமாக அரியலூர் பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாகவும், இதில் அரசில் தொடர்பான ஆலோசனையும் நடைபெறும் என்று கூறப்படுகிறது. சந்திப்பு முடிந்து அனைவரும் விஜயுடன் பிரியாணி விருந்து சாப்பிட உள்ளனர். ஏற்கனவே நாமக்கல், காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த விஜய் தற்போது 2-ம் கட்ட சந்திப்பை நடத்த உள்ளார்.
தமிழக அரசியலில், திமுக ஆட்சி அமைத்து ஒன்னரை வருடங்களுக்கு பின் உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திப்பது பெரும் கவனம் ஈர்த்துள்ளது. மேலும் கடந்த சில வருடங்களாக விஜய் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சமீப காலமாக உதயநிதிக்கும் விஜய்க்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.