விஜய் ஆண்டனி பெயர் வச்சது இவர்தான்: இப்போ ராசியா இருக்காரே, என்ன குறைச்சல்? விஜய் அம்மா ஷோபா பேச்சு!

இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதில் வெற்றி கொண்ட விஜய் ஆண்டனி, நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அசத்தி வருகிறார். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதில் வெற்றி கொண்ட விஜய் ஆண்டனி, நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அசத்தி வருகிறார். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Screenshot 2025-09-12 192725

விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் முதன்முதலில் இசையமைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கினார். 2005ல் ‘சுக்ரன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், 2008ல் வெளியான ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் "நாக்க முக்கா" பாடலால் பெரும் புகழைப் பெற்றார். இதைத் தொடர்ந்து, ‘வேட்டைக்காரன்’, ‘நான்’, ‘பிச்சைக்காரன்’ போன்ற படங்களில் இசையமைத்ததுடன், பின்னணிப் பாடகராகவும் இடம்பிடித்தார்.

Advertisment

2012ல் ‘நான்’ திரைப்படத்தின் மூலம் நடிகராகத் திரைத்துறையில் புதிய அடிமை எடுத்து வைத்தார். 2016ல் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் அவரது திரைப்பட பயணத்தில் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. இதில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தார். பிச்சைக்காரன் படம் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, ‘சாலை’, ‘யாமிருக்க பயமேன்’, ‘காளி’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘பிச்சைக்காரன் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

‘பிச்சைக்காரன் 2’ படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். தனது படங்களில் சமூகத்தின் உண்மைகள், உணர்ச்சி பூர்வமான கதைகள், ஏழை மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு செல்வதன் மூலம் தனித்துவமான பாணியை உருவாக்கியுள்ளார். விஜய் ஆண்டனி ஒரு இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமைகளுடன் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளார்.

இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதில் வெற்றி கொண்ட விஜய் ஆண்டனி, நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அசத்தி வருகிறார். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி, தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாகவும் உலா வருகிறார்.

Advertisment
Advertisements

இவரின் 25-வது படமாக சக்தித் திருமகன் படம் உருவாகியிருக்கிறது. அருவி, வாழ் போன்ற படங்களை இயக்கிய அருண் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு, விஜய் ஆண்டனியின் 25-வது படத்துக்கான நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் அவரை பற்றி தளபதி விஜயின் அம்மாவான ஷோபா அவர்கள் பேசியுள்ளார். 

அதில் அவர் பேசுகையில், "விஜய் ஆன்டனி எங்கள் வீட்டில் ஒருவர் போல தான். நான் இன்றைக்கு வேறு ஒரு இடத்தில இருந்தேன். என்னை கால் செய்து அழைத்தார். நான் உடனே ஓகே நான் வரேன் என்று கூறிவிட்டேன். அவ்வளவு தான் விஜய் ஆன்டனி எங்களுக்கு. எண் கணவர் தான் 'சுக்ரன்' படத்தின் மூலம் அறிமுக படுத்தினார். அப்போது அவருடைய பெயர் பிரான்சிஸ் ஆன்டனி சிறில் ராஜா அனால் எண் கணவர் தான் விஜய் ஆன்டனி என்று மாற்றினார்." என்று பகிர்ந்துகொண்டார். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: