Actor Vijay’s selfie becomes most retweeted photo in Twitter India : கடந்த பிப்ரவரி மாதம் மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். விசாரணைக்காக நடிகர் விஜய் படபிடிப்பு தளத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஒத்துழைத்த விஜய் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். வருமான வரித்துறை சோதனையை அறிந்த பிறகு, நெய்வேலியில் படபிடிப்பு நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிய துவங்கினார்கள்.
Thank you Neyveli pic.twitter.com/cXQC8iPukl
— Vijay (@actorvijay) February 10, 2020
தொடர்ந்து அதிகரித்து வந்தது ரசிகர் கூட்டம். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் படபிடிப்பினை முடித்த விஜய் அங்கிருக்கும் பேருந்து ஒன்றில் ஏறி ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அந்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த செல்ஃபி பலராலும் அதிகம் ரிட்வீட் செய்யப்பட்டது. தற்போது இந்திய அளவில் பலராலும் பகிரப்பட்ட ட்விட்டர் பதிவாக அது அமைந்துள்ளது. இதற்கு முன்பு ஷாருக்கானின் புகைப்படம் தான் அதிக அளவில் பகிரப்பட்டதாக இருந்தது. அதனை பின்னுக்கு தள்ளியது விஜய்யின் இந்த க்யூட் செல்ஃபி. #INDIAsMostRTedVIJAYSelfie என்ற ஹேஷ்டேக்கில் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Actor vijays selfie becomes most retweeted photo in twitter india
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!