/tamil-ie/media/media_files/uploads/2022/02/Vimals.jpg)
ஏ.ஆர். ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
நடிகர் விமல் சென்னையில் விழா ஒன்றில் இன்று கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர் ஒருவர், “ஏ.ஆர். ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிகளில் நடந்த குளறுபடிகள் குறித்து கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நடிகர் விமல், “அதில் தமக்கு எதுவும் தெரியவில்லை. தெரிந்தால்தான் பேச முடியும். தெரியாமல் எப்படி பேச முடியும்” என்றார்.
தொடர்ந்து, மீண்டும் அதேகேள்வியை கேட்ட நிலையில், “சீரியஸா தெரியவில்லை” எனப் பதிலளித்தார். சென்னையில் ஏ.ஆர். ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை கச்சேரி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கச்சேரியில் பார்வையாளர்களுக்கு உரிய வசதிகள் ஏற்பாடு செய்துக்கொடுக்கவில்லை என்றும் 20 ஆயிரம் பேருக்கு அனுமதி வாங்கிவிட்டு 40 ஆயிரத்துக்கும் மேல் டிக்கெட்டுகள் விற்றதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தக் கச்சேரி காரணமாக ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் டிராப்பிக்கில் சிக்கி தவித்துள்ளனர். இது தொடர்பான செய்திகள் தற்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் நடிகர் விமல், ஏ.ஆர். ரஹ்மானின் கச்சேரி தொடர்பான செய்தியை தவிர்க்கும்படி பதில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.