/indian-express-tamil/media/media_files/2025/09/22/vinoth-2025-09-22-16-17-38.jpg)
கவுண்டமணி - செந்தில் கம்போ மாதிரி இருக்குன்னு சொன்னாங்க: ரோபோ சங்கர் பற்றி கல்லூரி வினோத் ஓபன்!
திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வந்த ரோபோ சங்கர் சமீபத்தில் காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி பிரபலங்கள் பலர் ரோபோ சங்கர் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், ‘கல்லூரி’, ‘மாரி’ போன்ற படங்களில் நடித்த நடிகர் வினோத், ரோபோ சங்கர் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, " உங்களிடம் ஒரு திறமை இருந்தது என்றால் ரோபோ சங்கர் அதை வந்து சொல்வார். சீனியர் ஜுனியர் என்று பார்க்கமாட்டார்.
‘மாரி’ படத்தில் நிறைய டயலாக்குகள் இப்படி பேசலாம் அப்படி பேசலாம் என்று நானும், ரோபோ சங்கரும் சேர்ந்து பேசி நடித்தது தான். ரோபோ சங்கருக்கு நிறைய டயலாக் இருந்தால் தம்பி பேசட்டும் என்று அதை எனக்கு கொடுப்பார். இவ்வாறு திரையை பகிர்ந்து கொள்வார். ரோபோ சங்கர் நிறைய ஸ்பேர் கொடுப்பார்.
தனுஷிற்கும் ரோபோ சங்கரும் இடையில் நல்ல நட்பு இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் ரோபோ சங்கரிடம் தனுஷ் சார் இந்த நடிகர் மாதிரி பேசி காட்டுங்கள் என்று கூறுவார். தனுஷ் சார் ரொம்ப என்ஜாய் பண்ணுவார். தனுஷ் சார் மற்றும் ரோபோ சங்கர் கூட இருந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
ரோபோ சங்கரை தனுஷ் சார் ரொம்ப கலாய்ப்பார். ’வாய் மூடி பேசவும்’ படத்திற்கு பிறகு அப்படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன், ரோபோ சங்கரை அழைத்து ஒரு பெரிய நடிகரை வைத்து படம் செய்ய போகிறேன். அந்த படத்தில் நீ நடிக்க வேண்டும் என்று கூறிவிட்டு கதாபாத்திரம் முதற்கொண்டு கூறியுள்ளார்.
அதன் பிறகு தனுஷ் வைத்து தான் படம் எடுக்கப் போகிறார் என்று தெரிந்தவுடன் ரோபோ சங்கர் நம்மை அழைப்பாரா? மாட்டாரா? என்ற சந்தேகத்தில் இருந்துள்ளார். ஆனால், இயக்குநர் பாலாஜி மோகன், ரோபோ சங்கரை அழைத்து வாய்ப்பு கொடுத்துள்ளார்.
பொதுவாக பாலாஜி மோகன் சாதாரண நடிகர் பேசுவது போன்று டயலாக் எழுத மாட்டார். ரோபோ சங்கர் பேசுவது போன்று தான் எழுதுவார். 'மாரி’ படப்பிடிப்பு தளத்திற்கு வருவதற்கு முன்பும் படப்பிடிப்பு முடிந்த பின்பும் ரோபோ சங்கர் உடற்பயிற்சி செய்வார்.
’ஜாலியோ ஜிம்கானா’ படப்பிடிப்பின் போது அவரை பார்த்து நான் உடைந்துவிட்டேன். அதன்பிறகு மஞ்சள் காமாலை பதிப்பு குறித்து சொன்னார். ரோபோ சங்கர் மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். கடவுள் டைம் கொடுத்திருந்தால் அவர் கம்பேக் கொடுத்திருப்பார். நடிகர் கமலுடன் நடிக்க வேண்டும் என்பதுதான் ரோபோ சங்கரின் பெரிய ஆசை" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.