Advertisment

லைகா நிறுவனம் வழக்கு: விஷாலின் மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை - ஐகோர்ட் உத்தரவு

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், நடிகர் விஷால் செப்டம்பர் 12-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Mark Antony HC

விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாததால், நடிகர் விஷால் செப்டம்பர் 12-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை

வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Advertisment



நடிகர் விஷால், தன்னுடைய படத்தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியின் படத்தயாரிப்புக்காக அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 21.29 கோடி கடன் கேட்டிருந்தார். இந்த பணத்தை லைகா நிறுவனம் செலுத்தியிருந்தது. இந்த பணத்தை திருப்பி செலுத்தும் வரையில், விஷால் தயாரிப்பு நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமை லைகா நிறுவனத்திடம் வழங்கப்படுவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. 



ஆனால், விஷாலின் தயாரிப்பு நிறுவனம், பணத்தை கொடுக்காமல்  ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட முயற்சி செய்தது. இதையடுத்து, பணத்தை செலுத்தாமல் 'வீரமே வாகை சூடும்' படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓ.டி.டி உரிமையை விற்பனை செய்யவும் தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டது. மேலும், அந்த தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்குகள் அல்லது ஓ.டி.டி தளங்களில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 08) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி தற்போது வரை 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தாமல் இருப்பதாகவும், விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வரும் 15-ம் தேதி வெளியிட உள்ளதாகவும் லைகா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கபட்டது. 

இதையடுத்து, லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தால் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாக இருந்த விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் நடிகர் விஷால் செப்டம்பர் 12-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court Vishal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment